சனி, 9 மார்ச், 2013

மரண தண்டனை - ஏன் கூடாது ?

வணக்கம் !!!

என் சொந்த கருத்துகளையே இந்த கட்டூரையில் நான் பதிவு செய்கிறேன். தனி நபரையோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ, அல்லது அவர்களது கருத்துகளையோ புண்படுத்துமேயானால், என்னை மன்னிக்கவும்!

இக்காலகட்டத்தில் நம் நாட்டில் உள்ள சமூக பிரச்சனைகளில் மிக முக்கியமானது தூக்கு / மரண தண்டனையை ரத்து செய்வதுதான். அதை பற்றி தான் இங்கே பதியவிருக்கிறேன்.

மரணம் எல்லோருடைய வாழ்கையிலும் நிகழும் ஒர் சம்பவம். மரண தண்டனை கொலை/ கற்பழிப்பு போன்ற பாதக செயல்களை செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் கொடுக்கப்படும்  உச்சபட்ச தண்டனையாகும். இது அனைவருக்கும் தெரிந்ததே !!!

மரண தண்டனை கிட்டதட்ட 58  நாடுகளில் இன்னும் வழக்கில் உள்ளது. 97 நாடுகளில் மரண  தண்டனையை தடை செய்துவிட்டனர். மீதம் உள்ள நாடுகளில் முழுமையாக தடை செய்யாமல்,போர் குற்றவாளிகளுக்கும், வேறு சில குற்றங்களுக்காகவும் வழங்கபடுகிறது.( தகவல்: விக்கிபீடியா )


சமூக ஊடகங்களும் ,மற்ற ஊடகங்களும், மக்கள் நல சங்கங்களும் மரணதண்டனையை அறவே ரத்து செய்ய கோரி வருகின்றனர். அவர்கள் வைக்கும் முக்கியமான வாதம்,  மரண தண்டனை அறமற்றது, மனிதாபிமானமில்லாத  செயல் என்பதுதான் அது.

"  கொலைக்கு தண்டனை கொலையாகாது ! "
"  தண்டனை அடைந்தவர் குடும்பத்தினர் என்ன செய்வார்கள் ? "
"  மரணதண்டனை நிடுநிலைமையான தீர்பல்ல ! "

எல்லாரும் சொல்வது போல இந்த கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இது போன்ற வாசகங்கள் கேட்க நன்றாக தான் இருக்கும். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது. இவையெல்லாம் ஒரு விதத்தில் ஏற்று கொள்ளும்படி இருந்தாலும், இந்த குற்றங்களுக்கு எல்லாம் என்ன தீர்வு?

கொலை பாதகம் செய்தால் உச்ச தண்டனை வழங்கப்படும் என்ற பயஉணர்வு இருந்தால் தான்  மக்களிடையே குற்றங்கள் குறையும். அதுவே இல்லை என்றால் குற்றங்கள் குறையாது. மரணதண்டனை அமலில் இருக்கும் போதே இத்தனை  கொலைகளும், கற்பழிப்புகளும் நடக்கும் போது, தண்டனையே ரத்தாகிவிட்டால் ?!?!

சிறைசாலை என்பது ஒருவன் தான் செய்த தவறை உணர வைக்கும் இடமாகவோ, திருந்த ஓர் வாய்ப்பாகவோ இருக்கலாம் என்றும் சொல்பவர்கள் உண்டு. ஆவேசபட்டோ, தெரியாமலோ, தவறு செய்பவர்களுக்கு மரண தண்டனைல்லாமல் வெறும் சிறை தண்டனை மட்டும் வழங்கபடலாம். அதுவும் சரியான தண்டனையாக இருக்குமா என எனக்கு தெரியவில்லை...

சர்வ சாதாரணமாக  கொலை செய்பவனிடம் திருந்த வாய்ப்பு கொடுப்பது
என்பது ஏற்க கூடியதாக இல்லை. உதாரணமாக, தர்மபுரியில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்து வழக்கிலும், நொய்டாவில் நூற்றிருக்கும் மேற்பட்ட சிறு குழந்தைகளை கொன்று, அவர்களுடைய உறுப்புகளை விற்ற வழக்கிலும், சமீபமாக தில்லியில் மாணவியை அலங்கோல படுத்திய வழக்கிலும், குற்றம் சாட்டப்பட்ட / குற்றவாளிகளை மன்னிகவோ, திருந்த ஓர் வாய்போ, அல்லது 10/ 20 ஆண்டு கால சிறைதண்டனையோ ஒரு சரியான தீர்ப்பாக இருக்காது , இருக்கவும் முடியாது. அவர்களுக்கெல்லாம் அரபு நாடுகளை போல தண்டனைகளை வழங்கப்பட வேண்டும்.

என் கருத்தில் கொஞ்சம் வன்மம் இருப்பது போல தெரிந்தாலும், அதை என்னைபோல ஒரு சாதாரணனின் மனம் ஏற்க மறுக்கிறது. நாம் எவ்வளவு தான் பேசினாலும், சமூக ஊடகங்களில் பகிர்ந்தாலும், அரசாங்கமும் நீதிமன்றமும் இதை பற்றி முடிவு எடுக்காதவரையில் ஒரு பயனும் இல்லை. அவர்கள் போராடுகிறார்கள், இவர்கள் வாதடுகிறார்கள்  என குழப்பாமல் ஒரு நடுநிலைமையான தீர்பே இதற்கு சரியான முடிவு.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தனிமனித ஒழுக்கம், மனித நேயம், இன்னும் பிற வளர்ந்து விட்டால், இதற்கு வேலை இல்லை...

விமல் ராஜ் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன், பின்னூட்டத்திற்கு நன்றி..
தனிமனித ஒழுக்கம், மனித நேயம், வளரும் வரையாவது மரண தண்டனை இருக்க வேண்டும்...