ஞாயிறு, 29 டிசம்பர், 2013

புதிய பாரதத்தின் ஆரம்பம் !

வணக்கம், 

அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனசுக்குள்ளே சின்ன சந்தோஷம். ஒரு வழியாக பழைய பேப்பர் ஆரம்பித்து 25-ஆவது பதிவை போட்டாகிவிட்டது. ஏதோ, எனக்கு தெரிந்த சில விஷயங்களை பதிவு செய்து வருகிறேன். இதுவரை கொடுத்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து என் வலைப்பூவிற்கு வந்து, நீங்கள் எல்லோரும் ஆதரவு தர வேண்டுமென்பது என் ஆசை.

சரி நம்ம தலைப்புக்குள் வருவோம். எப்போதும் என் வலைப்பூவில் சமூகம் சரியில்லை, இது சரியில்லை, அது சரியில்லை என நொட்டாரம் சொல்லியே எழுதி வைப்பேன். ஆனால் இன்று கொஞ்சம் நல்ல படியாக பாராட்டி எழுத வேண்டும் என்று எண்ணம். இன்றைய முக்கிய செய்தியை படிக்க கொஞ்சம் சந்தோஷமாகதான்  இருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைநகர் புதுதில்லியின் முதல்வராகிறார்!

திரைப்படங்களில் வருவது போல போன ஆண்டின் இறுதியில் 'அம் ஆத்மி' கட்சி ஆரம்பித்து, இந்த ஆண்டில் இறுதியில் முதல்வராகிவிட்டார்.
எதிர்த்து போட்டியிட்ட இரு பெரும் கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து, மக்கள் மனதிலேயே போராட்டம் நடத்தி, அவர்களின் நன்மதிப்பையும் பெற்று விட்டார். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள், தேர்தலில் நின்று ஜெயிப்பது புதிதல்ல; பெரிதுமல்ல.

நம்ம ஊரில் எம்.ஜி.ஆரும் ,பக்கத்து தெலுங்கு தேசத்தில் என்.டி.ஆரும் இப்படிதான் கட்சி ஆரம்பித்து ஓர் ஆண்டுக்குள்ளேயே ஆட்சியை பிடித்தனர். ஆனால், சினிமாவில் அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேல் கொ(கோ)டி கட்டி பறந்துவிட்டு, அந்த செல்வாக்கை வைத்தே கோட்டையை கைப்பற்றினார்கள்.

கேஜ்ரிவால் அப்படியல்ல. ஐ.ஐ.டி- யில் பொறியியல் படித்துவிட்டு, இந்திய வருவாய் துறையில் பணிபுரிந்தவர். 2006-ல் நாட்டின் உயரிய விருதில் ஒன்றான "ராமன் மகசேசே" விருது,  ஏழை மக்களுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி கொண்டு போய் சேர்த்தர்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பணியை துறந்த பின், விருதையும், பரிசு பணத்தையும் ஒரு அரசு சார்பற்ற நிறுவனத்திற்கு கொடுத்துதவியவர். ஜன் லோக்பால் சட்டத்தின் அமலுக்காக போராட்டம் நடத்தியவரில் ஒருவர். 2011 அன்னா ஹசாரே ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர். முதல்வர் பதவிக்கு இதை விட என்ன தகுதி தேவை ?

ஆனால் இன்றைய நாட்டு நடப்பில், பண பலம், அரசியல் பலம், சினிமா பலம் என எதுவும் இல்லாமல், மக்களின் மக்களாக இருந்த வேட்பாளர்களையே தேர்ந்தேடுத்து, தேர்தலில் வெற்றியும் கண்டு விட்டார். நேற்று (28-12-2013) தில்லி ராம்லீலா மைதானத்தில் பதவி பிரமாணம் ஏற்க வரும் போது மெட்ரோ ரயிலில் வந்து சேர்ந்ததாக சொல்கின்றனர். "கவுன்சிலரே 'கான்டசா'-வில் பறக்கும் போது, சி.எம். ஆட்டோவில் வர்றார்.. இந்தியா முன்னேறிடிச்சு போலருக்கே..!!! "  - என்ற முதல்வன் வசனம்  நினைவில் வருகிறது.


முதல்வரான பிறகு பிறப்பிக்கப்பட்ட முதல் ஆணையே, அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும்; மீறினால் வேலை பறிக்கப்படும் என்பதுதான். பாராட்டுதலுக்குரிய ஆணை தான். மேலும் இலவச குடிநீர், மின் கட்டண குறைப்பு போன்ற ஆணைகள் விரைவில் பிறப்பிக்கபடும் என்று கூறியுள்ளார். ஆணை போடப்பட்ட வேகத்தில் செயல்படுத்தினால் தேவலை என்று தோன்றுகிறது. எனக்கென்னவோ, இது ஒரு புதிய பாரதத்தின் விடியலுக்கான ஆரம்பமாகதான் தெரிகிறது!

ஒரு சின்ன வருத்தம், இது போன்ற நல்லதொரு  மாற்றம் நம்ம தமிழகத்தில் வரவில்லையே என்று தான். புது தில்லி மக்கள், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சி நடத்திய விதத்தை கண்டு தாங்காமல் தான் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். கேஜ்ரிவாலாவது கடைசி வரை மற்றவர்களை போல மாறாமல் இருந்தால் சரி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல !

வணக்கம்,

இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

அன்று முதல் இன்று வரை, ஒருவர் எதாவது தவறு செய்தாலோ அல்லது முறையில்லாமல் நமக்கு எதிராய் செய்தாலோ அவரை திட்டுவதற்கு, அவருடைய பிறப்பையோ, உறவையோ, சாதியையோ வைத்து கெட்ட வார்த்தையில் திட்டுவது ஒரு சிலரிடம் பழக்கமாகி விட்டது.

நம்முடைய கோபம் உச்சம் அடையும் போது, அதை வெளிக்காட்டி கொள்ள வருபவைதான் இந்த கெட்ட வார்த்தைகள். சிலரின் கோபம்  சாதாரண வார்த்தைகளில் அறிவுகெட்ட நாயே, பேயே, முண்டம், பொறுக்கி என திட்டி விட்டு அடங்கி விடும். ஆனால் சிலரின் கோபம், கொச்சை கொச்சையாய் எதிராளியை திட்டி தீர்த்தால் தான் அடங்கும்.


யாரும் அவர்தம் பெற்றோர் மூலமாகவோ, பள்ளிகூட பாடம் மூலமாகவோ கெட்ட வார்த்தைகளை கற்று கொள்வதில்லை. பதின்பருவ வயது ஆரம்பிக்கும் போது பிள்ளைகள் தன் உடன் படிக்கும் சிறார்களோடு/ சிறுமிகளோடு சேர்ந்து கற்று கொண்டு விடுகின்றனர். அவர்களுக்கு வேறு யாரோ சொல்லி தந்து விடுகின்றனர். பள்ளி செல்லாச் சிறார்களும் அவர்கள் வயதுடையவரிடமிருந்து கற்று கொள்கின்றனர். சுற்றத்தாரும், உடன் இருப்பவரும், ஊடகங்களும் வார்த்தைகளை எப்படி உபயோகிகின்றனர் என்பதை வைத்தே இளைய சமுதாயம் வளர்கிறது.

கல்லூரி மாணவர்கள் என்றால் பெண்களை கிண்டல் செய்பவர்கள் என்றும், வார்த்தைக்கு வார்த்தை ..த்தா .. ங்கொம்மா.. என்று முற்சேர்க்கையிட்டு (Prefix) பேசுவார்கள் என்று தான் திரையில் காண்பிக்கப்படுகிறது. அதை பார்த்துவிட்டு வரும் நம்மவர்களும், பெரும்பாலும் அப்படி தான் பேசுகின்றனர்.  

திரைப்படங்களில் வரும் வெகுஜன கதாநாயகர்கள் தகாத வார்த்தைகளை திரையில் உபயோகிக்கின்றனர். திரையில் வெளியிடப்பட்டு, சில நாட்களுக்கு பிறகு தொலைகாட்சியில் காட்டும் போது அந்த வசனத்தை மட்டும் வாயசைக்க வைத்து விடுகின்றனர். ஒரு சில சினிமா வசன உதாரணகள்...

திஸ் இஸ் மை ஃபக்கிங் கேம் ! - THIS IS MY FUCKING GAME !

ஏய் பாடு ! கம்மினாட்டி! அவனை ஏன்டா அடிச்ச  ?

..த்தா ! ...போடறா அவன....

நீங்கல்லாம் லவ் பண்ணி ,கல்யாணம் செஞ்சு மயிறையா புடுங்க போறீங்க? 

.த்தா .. தேவிடியா பசங்களா.. இதுக்கு தாண்டா நான் சட்டை போடறது... வேலையை பாருங்கடா ...

ஒம்மாள ! உனக்கு எப்படிடா தெரியும் ? 

மேற்கண்ட வசனங்கள் எல்லாம் வெற்றிகரமாக வெள்ளி திரையில் வந்தவை. உணர்வுபூர்வமான காட்சிகளுக்காக இது மாதிரி வசனங்களை திரையில் உலவ விடபடுகின்றன. பத்து / பதினைந்து  வருடங்களுக்கு முன்னால், படங்களில் இது போன்ற வசனங்கள் அவ்வளவாக வந்ததில்லை. அப்படியே வந்தாலும் ஒன்று, இரண்டு என மூன்றாம் தர படங்களில் மட்டுமே வரும்.

இந்த பதிவு வேறு யாரையோ பற்றி சொல்வது போல இருந்தாலும், நம்மில் பலருக்கு இந்த கெட்டப்பழக்கம் உண்டு. கொஞ்சம் வெட்கி தலைகுனியும் செயலாக இருந்தாலும்; மறுக்க முடியாத ஒன்று. 

பெரும்பாலும் கெட்ட வார்த்தைகள் பெண்களை இழிவு செய்வது போலவும், மனித உடல் பாகத்தினை குறிக்கும்படி தான் இருக்கிறது. அவன் தாயை, தமக்கையை, மனைவியை கொச்சை வார்த்தைகளால் திட்டி தீர்க்கபடுகிறது.

தகாத வார்த்தைகளை உபயோகிப்பவன், திட்டு வாங்குபவர் மன நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பார்ப்பதில்லை. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  நாட்டில் உலவும் பாலியல் வறட்சியின் காரணமாக தான் இது போன்ற கெட்ட வார்த்தைகள் வாயிலிருந்து வந்து விழுகின்றது என ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

நம் பாரத தாய் திருநாடு பெண்களின் பெருமை பேசும் ஒரு தேசம். நாம் பெண்களின் பெருமையையும், அடிப்படை மனித மரியாதையையும் போற்றி பாதுகாக்காவிட்டலும் பரவில்லை; குறைந்தது மதிக்கவாவது கற்று கொள்ள வேண்டும்.

பின் குறிப்பு: இப்பதிவு நண்பர் ராஜ்மோகனின்  "ரேடியோ மோகன்"  வலைப்பூவில் ஏச்சு வார்த்தைகள்   பதிவை  தழுவி எழுதப்பட்டது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

Google Google பண்ணி பார்த்தேன் உலகத்திலே !!!

வணக்கம்,

இன்றைய யுவன்/ யுவதிகளுக்கு இந்நவீன தொழில்நுட்ப உலகத்தில் கணினி, கைப்பேசி, இணையமும் (Computer, Mobile & Internet) இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது என்ற நிலை வந்துவிட்டது. திருவிளையாடல் படத்தில் " நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ! " என்று பாடிவிட்டு நடிகர் திலகம் ஒரு கணம் திரையில் அசையாமல் இருப்பார். அந்த கணம் உலகமே நின்றுவிடுவது போல காண்பிக்கப்படும். அதுபோல தான், இவை மூன்றும் இல்லாவிடில் நம் மக்கள் உலகமே நின்று விடுவது போல உணர்வார்கள்.

ஆதி முதல் அந்தம் வரை காசு, பணம், துட்டு, மனி என்பது போல, இவை அனைத்துக்கும் நாம் அன்றாட வாழ்வில் கணினியும், இணையமும் ஒன்றாகி விட்டது. கிட்ட தட்ட நம்முடைய எல்லா வேலைக்கும் இணையத்தின் (internet) உதவியை நாம் உபயோகபடுத்துகிறோம்.

முன்பெல்லாம் குழந்தை பிறந்ததும், என்ன பெயர் வைக்க வேண்டும் என்று பஞ்சாங்கத்தை தான் பார்ப்பார்கள். இப்போதோ, பிறந்த தேதியும், நட்சத்திரமும் வலைதளங்களில் கொடுத்து, இன்டர்நெட்டில் பெயர் தேர்ந்தெடுக்கிறார்கள். அலுவலககளில் சில பழைய முக்கிய தகவல்களை இணையத்தில் சேமித்து வைத்து கொண்டு ஒரு நொடி பொழுதில் மீட்டெடுத்து விடுகின்றனர்.

" பிறப்பு / இறப்பு சான்று பெற ,
அரசு அடையாள அட்டை எடுக்க,
பள்ளிகூட /கல்லூரி சேர்க்கைக்கு,
கல்லூரி கட்டணம் செலுத்த,
உறவினர்/ நண்பர்களுடன் அரட்டை அடிக்க,
தகவல் / செய்திகளை பரிமாறிக்கொள்ள,
பிறந்த நாள்/ விசேஷ நாளில் வாழ்த்து அட்டை அனுப்ப,
மின்னஞ்சல் பெற/அனுப்ப,
கைபேசியில் / கணினியில் மென்பொருள் பதிவிறக்கம் செய்து பதிய, 
வெளியூர் செல்ல பயண சீட்டு முன்பதிவு செய்ய,
திரைப்பட சீட்டு முன்பதிவு , 
திரைப்படங்கள்/ பாடல்கள்  பதிவிறக்கம் செய்ய,
விளையாடி களிக்க, 
செய்திகள்/கட்டுரைகள் படிக்க/வெளியட,
சமையல் குறிப்பு/ கதைகள் படிக்க,
சமூக வலைமனைகளில் தகவல் பகிர,
வேலை தேட,
பணி சம்பந்தமான சந்தேககளுக்கு உதவ,
வியாபாரத்தை/ பொருளை விளம்பரம் செய்ய,
பெண் தேட -பேசி/பழக மற்றும் திருமணத்திற்கு,
விடு/மனை/வாகனம் - வாங்க,விற்க,
வீட்டு பொருட்கள் /மற்றவை வாங்க அல்லது  விலை விசாரிக்க,
நல்ல நேரம் பார்க்க,
குழந்தைக்கு/ செல்ல பிராணிக்கு பெயர் வைக்க,
வானிலை அறிக்கை அறிந்து கொள்ள,
புதிதாக செல்லும் இடங்களுக்கு வழி சொல்ல,
புதிய இடம் பற்றி தெரிந்து கொள்ள ,
தெரியாத விஷயங்களை அறிய,
உங்கள் கருத்தை வெளிப்படையாய் பொது இடத்தில் சொல்ல... "
 
இன்னும் பல பல தகவல்களுக்காக நாம் இணையத்தை
உபயோகப்படுத்துகிறோம். சில சமயங்களில், இது தவறான வழியிலும் செயல்படுத்தப்படுகிறது என்பது தான் வருத்தமான விஷயம். பெண்களை தவறாக புகைப்படம் / காணொளி எடுத்து இணையத்தில் விடுவது, சமூக வலைதளங்களில் பெண்களின் பெயரில் போலி சுயவிவரம் கொண்டு ஏமாற்றுவது, மற்றவர் வங்கி கணக்குகளை ஏமாற்றி பணம் திருட,
திரைப்படங்களை  சட்டவிரோதமாக வலைதளங்களில் வெளியிட, உணர்ச்சிமிக்க சில வதந்திகளை பரப்ப என இந்த பட்டியலும் நீண்டு கொண்டு தான் போகிறது...

உலகம் முழுக்க நாம் பலரும் இணையத்தில் பயன்படுத்தும் ஒரு தேடல் தளம் கூகிள் (Google). யாகூ (Yahoo), பிங் (Bing)  போன்ற தேடல் தளங்கள் (Search Engine) பல இருந்தாலும், கூகிள் தான் முன்னணியில் நிற்கிறது. கூகிள் ஒரு நாள் வெளிநிறுத்தம் செய்தாலோ, அல்லது முக்கிய கணினி வலை சேவையகம் (Network Server) பழுதடைந்து போனாலோ, அவ்வளவு தான்! பல வணிக/ பெருநிறுவன அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது!!!

Google Search

கூகிள் - இணைய உலகின் ராஜா. இல்லை...இல்லை.... உலக மகா சக்ரவர்த்தி என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் கூகுளில் தேடுவது எதுவாயினும், நம்முன் வரிசை படுத்தி காட்டிவிடும்; சில சமயங்களில் தேவையில்லாததையும் சேர்த்து. நேற்று பேஸ்புக்கில்  கூகிள் தேடல் பற்றிய ஒரு காணொளி பார்த்தேன். அதை பார்த்த பின்பு தான் இந்த பதிவு எழுத வேண்டும் என தோன்றியது. சொல்ல போனால், அது  கூகுளின் விளம்பரத்திற்காக அவர்களால் வெளியிடப்பட்டது. ஆனால் நாம் எவ்வளவு தூரம் உபயோகப்படுத்துகிறோம் என்று இதை பார்த்தாலே புரியும். பல ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தன் தாத்தாவின் பால்ய சிநேகிதனை, பேத்தி  கூகிள் மூலம் தேடி அழைத்து வருகிறாள் என்பதே இந்த காணொளி.


இதிலேருந்து நமக்கு தெரிவது என்ன ? இணையம் போல எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் நாம் பயன்படுத்துவதில்தான் உள்ளது. நல்லதையே நினைத்து; நல்லதையே செய்வோம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்