ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

புல்லுக்கு இரைத்த நீர்!

வணக்கம் ,

இந்தியா ஏழை நாடு என சிலர் சொல்கிறார்கள். பண புழக்கம் கம்மியாய் இருக்கிறதாம். நம்முடைய பணம் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா? கீழுள்ள சில செய்தி துணுக்குகளை பாருங்கள். இவ்வளவு பணம் புழங்குகிறது என உங்களுக்கே புரியும்...


14.5
லட்சம் கோடி ரூபாய் வரியாக கடந்த ஆண்டில் இந்தியாவில் வசூலிக்கப்படுள்ளது.

30
லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணமாக வெளிநாட்டு வங்கிகளில் இருக்கிறது என சி.பி.ஐ ஆய்வறிக்கை சொல்கிறது.

10
லட்சம் கோடிக்கு மேல் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.

9
கோடியே கோடி ரூபாய் (910,603,234,300,000 INR ) ஊழல் கடந்த 68 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்துள்ளது.

90
இந்தியாவிலுள்ள உலக மகா கோடீஸ்சுவரர்களின் எண்ணிக்கை.

61,000
இந்திய கோடீஸ்சுவரர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

30,000
டன் அளவுள்ள தங்கம் ஒவ்வொரு ஆண்டும் கோவில்களால் வங்கிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.

1.5
லட்சம் கோடி மதிப்புள்ள புதையல் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.

5,000
கோடி. அரசியல் கட்சிகளுக்கு தானமாகவும், வருமானமாகவும் வருகிறது என ஓர் புள்ளி விவரம் சொல்கிறது.

1,400
கோடி. செய்திதாள்களில் கட்சி விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகை.

1,800
கோடி கட்சி விளம்பர பதாகைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

4,800
கோடி தொலைகாட்சியில் கட்சி விளம்பரதிற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

29,000
ரூபாய் தண்டமாகிறது, ராஜ்ய சபாவில் வீணடிக்கடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும்.

3
லட்சம் கோடி பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடனாக இருக்கிறது என ரிசர்வ் வங்கி ஆய்வு சொல்கிறது.

35
கோடி வீண். ராஜ்ய சபாவில் கடந்த குளிர்கால கூட்ட தொடரை நடக்க விடாமல் செய்ததால்.

1000
கோடி மதிப்புள்ள தங்கம் கடந்த ஆண்டில் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு பிடிபட்டுள்ளது.

71,000
கோடி வங்கி கடன் விவசாயிகளுக்காக தள்ளுபடி செய்ய பட்டுள்ளது.

1975
கோடி ஐ.பி.எல்-லில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்க பிரிவு சொல்கிறது.

2.27
லட்சம் கோடி இலவச திட்டங்களுக்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றுகிறது? நம் நாட்டில்
எவ்வளவு பணம் வீணாகிறது பாருங்கள். இவ்வாறு புல்லுக்கும், கதிருக்கும் இரைக்கப்பட்ட நீரை தவிர்த்தாலே நாடு வளமும், வளர்ச்சியும் அடையும்.

குறிப்பு - ஆனந்த விகடனில் இது போன்ற புள்ளி விவரங்கள் சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. அதை போல நாமும் எழுதலாம் என்று எண்ணி, இணையத்தில் பல தளங்களில் தேடி சேகரிக்கப்பட்டதை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்




வியாழன், 17 செப்டம்பர், 2015

நமஸ்தே, நிம்ம பெயர் ஏமி ?

வணக்கம்,

பெயரில் என்ன இவ்வளவு குழப்பம் என்று யோசிக்கிறீர்களா?

இந்தியாவில் பெயர்களை போட்டுகொள்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது.  ஃபாரம் பூர்த்தி செய்யும் போது First Name - Middle Name - Last Name என்று போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அதில் First Name என்பது நமக்கு வைக்கும் சொந்த பெயர் /அதிகாரப்பூர்வ பெயர். Middle Name என்பது தகப்பனார் பெயரை குறிக்கும். Last Name / Sur Name என்பது பெரும்பாலும் குடும்ப பெயராகவோ அல்லது சாதியின் பெயராகவோ தான் இருக்கும்.

வடக்கில் பெரும்பாலும் தங்கள் பெயருக்கு பின்னால் சமூகத்தின் பெயரையோ / குடும்ப பெயரையோ போட்டுகொள்கின்றனர். காஷ்மீர் மற்றும் பீகார் மாநில மக்கள், அவர்களுடைய பெயர்களுக்கு பின்னால் காஷ்மீரி அல்லது பீகாரி என்று சேர்த்து கொள்கின்றனர். பஞ்சாப் மாநில ஆண்கள் தங்கள் பெயருக்கு முன்னால் சிங் என்றும், பெண்கள் கவுர் என்றும் சேர்த்து கொள்கிறார்கள்.
[First Name] [Last Name] (Singh/Kaur) [Family Name ]
Harbhajan Singh
Gobindar Singh
Karanveer Singh SUMAG
Kulshan Kaur

மராட்டிய மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெயருக்கு பின்னால் தகப்பனார் பெயரையும், கடைசியில் குடும்ப பெயரையும் சேர்த்து கொள்கின்றனர்.
[First Name] [Father's/ Middle Name] [Last Name]
Sunil Manohar Gavaskar
Sachin Ramesh Tendulkar

நம் அண்டை மாநிலமான ஆந்திரா/தெலுங்கானாவில் குடும்ப பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் போட்டு கொள்கிறார்கள். குடும்ப பெயர் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த ஊரின் பெயராகவோ அல்லது அவர்களுடைய சமூகத்தில் செய்யப்படும் குடும்ப தொழிலாக தான் இருக்கிறது. சிலர் தங்கள் சாதி /சமூகத்தின் பெயரை  Last Name-மாக போட்டுகொள்கின்றனர். குடும்ப பெயர்கள் மற்றும் சாதி பெயர்கள் நிறம் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
[First Name]  [Last/ Family Name]
Suryaprakash Pollepalli
Kishore Illaka
Mariappan Karthik Thottapalli
Viswanath Chirani
Byrraju Ramalinga Raju
Kota Srinivasa Rao
Nara Chandrababu Naidu
Akkineni Nagarjuna
Nandamuri Taraka Rama Rao
Daggubati Venkatesh

கேரளாவில் தங்கள் பெயருக்கு முன்னால் குடும்ப பெயரையும், சாதியின் பெயரை பெயருக்கு பின்னாலும் போட்டுகொள்வார்கள். குடும்ப பெயர்கள் பெரும்பாலும் சொந்த ஊரின் பெயரையே குறிக்கும். குடும்ப பெயர்கள் நிறம் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


[Middle /Place Name]  [First/Given Name]   [Last /Father's /Caste Name ]
Kannott Karunakaran Marar
Tirunellai Narayanaiyer Seshan
Elankulam Manakkal Sankaran Namboodiripad
Mani Madhava Chakyar

கர்நாடகாவில் தங்கள் பெயருக்கு பின்னல் தகப்பனார் பெயரையும், சாதியின் பெயரையும் போட்டுகொள்கின்றனர். இவர்களுடைய Middle name தகப்பனார் பெயராகவும், Last Name குடும்ப பெயராகவோ அல்லது குடும்ப தொழிலாகவோ தான் இருக்கிறது.
[First/Given Name] [Middle /Father's Name]   [Last Name/Caste Name]
Sudheep Sivarajan Gauda
Rama Krishna Hedge

தமிழ்நாட்டில் தங்கள் தகப்பனாரின் பெயரை தான் தங்களுடைய முதலெழுத்தாக (Initial) போட்டு கொள்கின்றனர். இப்போதெல்லாம் தாயாரின் முதலெழுத்தையும் சேர்த்து இரண்டு இனிஷியலாக போடுகின்றனர். இன்னும் சிலர் தங்கள் ஊரின் பெயரையும் சேர்த்து முதலெழுத்தாக போடுகின்றனர். பெண்கள் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய கணவரின் பெயரை முதலேழுத்தாகவோ/ பெயரின் பின்னலோ போட்டு கொள்கின்றனர்.
[First Name] [Last /Father's Name] 
S.Saravanan / Saravanan Sivakumar (Saravanan S/o Sivakumar)
S.P.Kumaran (Kumaran S/o - Sivakumar & Parvathi)
R.K.Narayanan ('Rasipuram' Krishnaswami Narayanan)
S.Kushboo / Kushboo Sundar (Kushboo W/o Sundar)
M.A.Chidambram (Chidambram S/o M. Annamalai Chettiar)

தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதி பெயரையோ, தங்கள் குடும்ப பெயரையோ தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளும் பழக்கம் இல்லை. சாதியின் பெயரை பெயருக்கு பின்னர் போட்டு கொள்ளும் மரபு முன்பு இருந்தது. 1960-ல் திராவிட கட்சிகளின் சமூக புரட்சி காரணமாக சாதி பெயர்கள், நம் தெருகளிலிருந்தும், பெயரிலிருந்தும் நீக்கபட்டுவிட்டது. அறிந்தோ, அறியாமலோ திராவிட கட்சிகள் செய்த நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.

இப்படிதான், இந்தியாவில் பெயரளவில் கூட நாம் ஒன்றாய் இருப்பதில்லை. ஒருவரின் பெயரில் உள்ள குடும்ப பெயரையோ/சாதியின் பெயரையோ வைத்து அவர் என்ன சாதியை சார்ந்தவர் என்று தெரிந்து கொள்வதால் வேற்றுமை தான் ஏற்படுகிறது. தமிழகத்தில் பெயரில் உள்ள சாதி நீக்கப்பட்டது போல பாரதம் முழுவதும் எப்போது நீக்கப்படுமோ எனத் தெரியவில்லை.

தகவல்கள் : விக்கிபீடியா ,கோரா 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 9 செப்டம்பர், 2015

தண்ணீர் ! தண்ணீர் !

வணக்கம்,

உலகில் உள்ள பல பிரச்சனைகளில் மிக முக்கியமானது தண்ணீர் பிரச்சனை தான். ஒருபுறம் பூமி வெப்பமயமாவதால் பனிபாறைகள் உருகி, பல நகரங்கள் கடலுக்கு அடியில் போக வாய்ப்புண்டு என்று சொல்லி வருகின்றனர். இதை தவிர, இன்னும் சில ஆண்டுகளில் குடிக்க நல்ல தண்ணீர் கூட கிடைக்காமல் போகலாம் என்று நம்மை பயமுறுத்துகின்றனர் சிலர். சுற்றுப்புற ஆர்வலர்கள் பலரும் இந்த பசுமையான வளத்தை கொண்ட பூமி, வறண்ட பூமியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லுகின்றனர்.

ஆப்பிரிக்கா போன்ற சில வறண்ட நாடுகள், Dry day is coming என்ற பிரச்சாரத்தை மக்களிடையே பரப்ப ஆரம்பித்து இருக்கின்றனர். அதிகமாக தண்ணீர் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும், அனாவசியமாக தண்ணீர் செலவு செய்யாதிருக்கவும், வரப்போகும் தண்ணீர் பஞ்சத்தை பற்றியும் எடுத்து சொல்கின்றனர். அவ்வாறு நடக்காமலிருக்க, தண்ணீரை நாம் சேமித்து வைக்க வேண்டும் என்பதை முக்கிய விஷயமாக சொல்கின்றனர்.


ஏற்கனவே  கென்யாவில் உள்ள  நைரோபி நகரில், Water ATM எனப்படும் குடிநீருக்கான ஏ.டி.எம்-ஐ அந்த அரசு நிறுவியுள்ளது. கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, குறைந்த விலையில் இதுபோல ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது கென்யா அரசு.


ஐ.நா சபையின் கூற்றுப்படி தண்ணீர் தட்டுப்பாடு உலகின் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று சொல்கிறது. 700 கோடி மக்கள் தொகையை கொண்ட பூமியில், 43 நாடுகள் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் நிலை வரும் என்று அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்க சஹாரா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

இதெல்லாம் எங்கோ, வேறு எதோ நாடுகளுக்கு தான் பொருந்தும் என்ற எண்ணி விட வேண்டாம்.  Water ATM கென்யாவில் மட்டுமல்ல, இந்தியாவில் பல இடங்களில் இருக்கிறது. இப்போதே நிலத்தடி நீர் இந்தியாவில் வறண்டு போய்விட்டது என்று புவுயியல் ஆராய்ச்சி துறை சொல்கிறது. ஒரு சர்வதேச ஆய்வறிக்கையின் படி,
  1. உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில், இந்தியாவின் பங்கு  16%. அதில் 4% பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் இருக்கிறது.
  2. புது தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய  நகரங்கள் உலகின் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த நகரங்களாக மாறபோகிறது.
  3. 2040-ல் இந்தியாவில் குடிக்க தண்ணீரே இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு வர காரணங்களாக இருப்பவை:
  1. காடுகளை அழிப்பதால், மழை பொய்த்து விடுகிறது.
  2. சட்ட விரோத மணல் கொள்ளையினால், ஆற்று தண்ணீர் ஊருவதில்லை. 
  3. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆழ்த்துளாய் கிணறுக்காக 300,400 அடிகள் வரை தோண்டி, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர். குடிக்கவும், விவசாயத்திற்கும் தண்ணீர் போதவில்லை. 
  4. தொழிற்சாலைகளின் கழிவுகளை ஆறு, எரிகளில் கலந்து விடுகின்றனர். நீர்நிலை மாசுபடுவதால், குடிநீர் வீணாகி போகிறது.
இதை தவிர்க்க நாமும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. கீழுள்ள படங்கள் யாவும் ஃபேஸ்புக்கில் 'Logical Indian' பக்கத்தில் பகிரப்பட்டது.











இதை பற்றி  மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வருவோம். நீரின் அவசியத்தை சொல்வோம். தண்ணீரை சேமிப்போம்! உலகின் வளம் காப்போம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்