புதன், 11 நவம்பர், 2015

தூங்காவனம் - விமர்சனம்

வணக்கம்,

உலக நாயகனுக்கு இந்த வருடத்தில் ரிலீசாகும் மூன்றாவது படம் இது.  நீண்ட இடைவேளைக்கு பிறகு, இப்படி ஒன்றன் பின் ஒன்றாக இவருடைய படங்கள் வெளிவருகிறது. படப்பிடிப்பு  ஆரம்பிக்கும் போதே இது 'Sleepless Night' என்ற ப்ரெஞ்ச் படத்தின் அதிகாரபூர்வ தழுவல் என்று சொல்லிவிட்டனர். இல்லாவிடில் இதுவும் காப்பியடிக்க படம் என்று ஜல்லியடித்திருப்பர்கள் நம் வலைமன்னர்கள்.

டிரெய்லரை பார்க்கும் போது ஒரு விறுவிறுப்பான படம் போல தான் தெரிந்தது.  'நான் சொன்னா செய்வேன்...' என்ற பஞ்ச்சில் மிரள வைக்கிறார் உலக நாயகன் கமல் ஹாசன்.


படத்தில் பாடல்கள் இல்லை; டூயட் பாட ஹீரோயின் இல்லை. நைட் கிளப்பில் ஒரு நாள் இரவில் நடக்கிறது மொத்த கதையும். அண்டர்கவர் போலிஸ் அதிகாரியான கமலின் மகனை வில்லன் கும்பல் கடத்தி விடுகிறது. தன் மகனை எதிரிகளிடமிருந்து எப்படி மீட்டார் என்பதே கதை. பொதுவாக இது போன்ற ஆக்ஷன் திரில்லர் வகையறா படங்களில் உலக நாயகன் நடிக்கிறார் என்றால் கதையும், திரைக்கதையும் பின்னி பெடலெடுத்து இருப்பார். ஆனால்  இப்படத்தில் திரைக்கதையில் கொஞ்சம் தேய்வு இருப்பது வருத்தம் தான்.

போதை தடுப்பு பிரிவு போலிசாக கமல். நடிப்பில் எப்போதும் போலதான். நோ கமெண்ட்ஸ்! மகனிடம் பரிவு காட்டும் போதும் சரி, வில்லனிடம் கோபம் காட்டும் போதும் சரி. ஏ கிளாஸ் நடிப்பு. இன்னொரு போலிசாக திரிஷா. மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது பழைய நடிகை கமலா காமேஷ் போல தான் தெரிகிறார் (சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மனைவியாக நடித்தவர்). அதிரடி பெண் போலிஸ் ஆபிசராக நடிக்க இன்னும் பயிற்சி வேண்டும் என நினைக்கிறன். கமலின் மகனாக அமன் அப்துல்லா. நடிப்பு பரவாயில்லை. மேலும் பிரகாஷ் ராஜ், சம்பத், உமா ரியாஸ், மது ஷாலினி, ஜெகன், கிஷோர், யூகி சேது என பலர் கதையில் வந்து சென்றிருகிருக்கின்றனர்.

கமலின் திருமண வாழ்க்கை, அவருக்கு கொடுக்கப்பட்ட அண்டர்கவர் அசைன்மெண்ட்,  யூகி சேது - கிஷோரின் முன்கதை என எதையும் விரிவாக சொல்லவில்லை.

இது கமல் படம் என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதையிலும், காட்சியமைப்பிலும் அவருடைய டிரேட் மார்கே இல்லை; மது ஷாலினி கிஸ்ஸிங் சீன் தவிர. படம் முழுக்க காட்சிகளும்,  ஹீரோவும் பரபரவென ஓடி கொண்டே இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் படம் பார்க்கவே போர் அடிக்கிறது. கொஞ்சம் தூக்கம் தான் வருகிறது. இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம், கமலுக்காக !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்