ஞாயிறு, 5 ஜூன், 2016

யாருக்காக ? இந்த ப்ராஜெக்ட் யாருக்காக ?

வணக்கம்,

விடுமுறை முடிஞ்சாச்சு. பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கபட உள்ளன. இப்போதுள்ள மாணவ மாணவிகளை பரீட்சைக்கு பிறகு பெரிதும் கிலியூட்டும் ஒரு வார்த்தை ப்ராஜெக்ட் (Project). முன்பெல்லாம் கல்லூரியின் இறுதி ஆண்டில் படிப்பவர்களை மட்டுமே ப்ராஜெக்ட் என்ற ஒன்றை கட்டாயம் செய்து காட்ட வேண்டும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இன்றோ, பள்ளிகளிலும் அந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கதிற்கு வந்து கொண்டிருகிறது.

நான் பள்ளிகளில் படித்த காலத்தில் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் Holiday Homework க்காக பரீட்சையின் வினாத்தாள்களை எழுதி வர சொல்லுவார்கள். நாங்களும் விழுந்து விழுந்து கடைசி நாள் வரை எழுதிவிட்டு, பள்ளி ஆரம்பித்ததும் போய்க் கொடுப்போம். ஆனால் இன்றோ ப்ராஜெக்ட் என்று ஒன்றை செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்லுகின்றனர். அதற்கும் மதிப்பெண் வேறு உண்டு என்று சொல்லிவிடுகின்றனர்.

school projects

ப்ராஜெக்ட் என்பது நல்ல விஷயம் தானே.. பிள்ளைகளின் அறிவு கூடும் என்று யோசிக்க வேண்டாம். அது நல்லது தான் என்றாலும், ப்ராஜெக்ட்  செய்ய ஒரு வயது வரம்பு வேண்டாமா ?? மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை
பிள்ளைகளுக்கு வெவ்வேறு தலைப்புகளில் ப்ராஜெக்ட்  வொர்க்கை கொடுத்து விடுகின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

ப்ராஜெக்ட் வொர்க் என்றால் படங்கள் வாங்கி சார்ட்டில் ஒட்டுவது, பொது அறிவு விஷயங்களை அட்டையில் எழுதி வருவது என்று கொடுத்தால் மாணாக்கருக்கு உதவியாக இருக்கும். விடுமுறையிலும் அவர்கள் எதோ ஒன்றை படித்து தெரிந்து கொள்வது போல இருக்கும். ஆனால் நடப்பது என்ன தெரியுமா??

சில பள்ளிகளுக்கு என்னன்ன தலைப்பை ப்ராஜெக்டாக பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவதில்லை. தேசிய நினைவுச்சின்னங்களை மாதிரி வடிவமைப்பாக தெர்மகொலில்/அட்டையில் செய்து கொண்டு வாருங்கள், உலக உருண்டையின் மாதிரியை சுற்றுவது போல செய்யுங்கள் என்று ஆறாம், எட்டாம் வகுப்பு மாணவரிடம் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் ? சூரிய குடும்பத்தின் மாதிரியை கிரகங்கள் சுழல்வது போல செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். பெரும்பாலும் இந்த ப்ராஜெக்ட்டை ஸ்டெப்பர் மோட்டார் (stepper motor ), பாட்டரி (battery) உதவியுடன் செய்து அசைய/ சுழல வைக்க வைக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களின் உதவியுடன் தான் செய்ய வேண்டும் என்று உத்தரவு வேறு.  இக்கால பிள்ளைகள் நம்மை விட 10 மடங்கு புத்திசாலிகளாகவும், நல்ல திறமைமிக்கவர்களாகவும் இருகின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இது போன்ற பாட திட்டங்களெல்லாம் மிகவும் அதிகம். எல்லா பெற்றோரும் இதெல்லாம் தெரிந்தவராக இருக்க முடியுமா?? இல்லை எல்லாராலும் இதை செய்ய தான் முடியுமா?? என்ன அடிப்படையில் இது போல செய்ய சொல்கிறார்கள் என்ன தெரியவில்லை. இதையும் சில அம்மா அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளுக்காக செய்து கொடுக்கின்றனர் என்பதை ஒப்பு கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.

பள்ளி பிள்ளைகளின் விடுமுறை நேரத்தை சரியான முறையில் செலவழிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, இது போன்று பள்ளி பிள்ளைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தகுதி மீறிய விடுமுறை வீட்டுப்பாடத்தை ப்ராஜெக்ட் என்ற பெயரில் செய்ய சொல்லலாமா? இது எந்த வகையில் நியாயம் என எனக்கு தெரியவில்லை. இந்த கேள்விகளுக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் யாரேனும் தயவு செய்து பதில் சொல்லுங்களேன் !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

2 Comments:

Avargal Unmaigal சொன்னது…

ஆசிரியர்கள் கேள்விகள்தான் கேட்பார்கள் அதனால் உங்களின் நியாமான கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டார்கள்

விமல் ராஜ் சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மை தான்.இருந்தாலும் கஷ்டபடுவது நாம தானே!!!
வருகைக்கு நன்றி மதுரை தமிழா! ...