ஞாயிறு, 1 டிசம்பர், 2013

Google Google பண்ணி பார்த்தேன் உலகத்திலே !!!

வணக்கம்,

இன்றைய யுவன்/ யுவதிகளுக்கு இந்நவீன தொழில்நுட்ப உலகத்தில் கணினி, கைப்பேசி, இணையமும் (Computer, Mobile & Internet) இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது என்ற நிலை வந்துவிட்டது. திருவிளையாடல் படத்தில் " நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ! " என்று பாடிவிட்டு நடிகர் திலகம் ஒரு கணம் திரையில் அசையாமல் இருப்பார். அந்த கணம் உலகமே நின்றுவிடுவது போல காண்பிக்கப்படும். அதுபோல தான், இவை மூன்றும் இல்லாவிடில் நம் மக்கள் உலகமே நின்று விடுவது போல உணர்வார்கள்.

ஆதி முதல் அந்தம் வரை காசு, பணம், துட்டு, மனி என்பது போல, இவை அனைத்துக்கும் நாம் அன்றாட வாழ்வில் கணினியும், இணையமும் ஒன்றாகி விட்டது. கிட்ட தட்ட நம்முடைய எல்லா வேலைக்கும் இணையத்தின் (internet) உதவியை நாம் உபயோகபடுத்துகிறோம்.

முன்பெல்லாம் குழந்தை பிறந்ததும், என்ன பெயர் வைக்க வேண்டும் என்று பஞ்சாங்கத்தை தான் பார்ப்பார்கள். இப்போதோ, பிறந்த தேதியும், நட்சத்திரமும் வலைதளங்களில் கொடுத்து, இன்டர்நெட்டில் பெயர் தேர்ந்தெடுக்கிறார்கள். அலுவலககளில் சில பழைய முக்கிய தகவல்களை இணையத்தில் சேமித்து வைத்து கொண்டு ஒரு நொடி பொழுதில் மீட்டெடுத்து விடுகின்றனர்.

" பிறப்பு / இறப்பு சான்று பெற ,
அரசு அடையாள அட்டை எடுக்க,
பள்ளிகூட /கல்லூரி சேர்க்கைக்கு,
கல்லூரி கட்டணம் செலுத்த,
உறவினர்/ நண்பர்களுடன் அரட்டை அடிக்க,
தகவல் / செய்திகளை பரிமாறிக்கொள்ள,
பிறந்த நாள்/ விசேஷ நாளில் வாழ்த்து அட்டை அனுப்ப,
மின்னஞ்சல் பெற/அனுப்ப,
கைபேசியில் / கணினியில் மென்பொருள் பதிவிறக்கம் செய்து பதிய, 
வெளியூர் செல்ல பயண சீட்டு முன்பதிவு செய்ய,
திரைப்பட சீட்டு முன்பதிவு , 
திரைப்படங்கள்/ பாடல்கள்  பதிவிறக்கம் செய்ய,
விளையாடி களிக்க, 
செய்திகள்/கட்டுரைகள் படிக்க/வெளியட,
சமையல் குறிப்பு/ கதைகள் படிக்க,
சமூக வலைமனைகளில் தகவல் பகிர,
வேலை தேட,
பணி சம்பந்தமான சந்தேககளுக்கு உதவ,
வியாபாரத்தை/ பொருளை விளம்பரம் செய்ய,
பெண் தேட -பேசி/பழக மற்றும் திருமணத்திற்கு,
விடு/மனை/வாகனம் - வாங்க,விற்க,
வீட்டு பொருட்கள் /மற்றவை வாங்க அல்லது  விலை விசாரிக்க,
நல்ல நேரம் பார்க்க,
குழந்தைக்கு/ செல்ல பிராணிக்கு பெயர் வைக்க,
வானிலை அறிக்கை அறிந்து கொள்ள,
புதிதாக செல்லும் இடங்களுக்கு வழி சொல்ல,
புதிய இடம் பற்றி தெரிந்து கொள்ள ,
தெரியாத விஷயங்களை அறிய,
உங்கள் கருத்தை வெளிப்படையாய் பொது இடத்தில் சொல்ல... "
 
இன்னும் பல பல தகவல்களுக்காக நாம் இணையத்தை
உபயோகப்படுத்துகிறோம். சில சமயங்களில், இது தவறான வழியிலும் செயல்படுத்தப்படுகிறது என்பது தான் வருத்தமான விஷயம். பெண்களை தவறாக புகைப்படம் / காணொளி எடுத்து இணையத்தில் விடுவது, சமூக வலைதளங்களில் பெண்களின் பெயரில் போலி சுயவிவரம் கொண்டு ஏமாற்றுவது, மற்றவர் வங்கி கணக்குகளை ஏமாற்றி பணம் திருட,
திரைப்படங்களை  சட்டவிரோதமாக வலைதளங்களில் வெளியிட, உணர்ச்சிமிக்க சில வதந்திகளை பரப்ப என இந்த பட்டியலும் நீண்டு கொண்டு தான் போகிறது...

உலகம் முழுக்க நாம் பலரும் இணையத்தில் பயன்படுத்தும் ஒரு தேடல் தளம் கூகிள் (Google). யாகூ (Yahoo), பிங் (Bing)  போன்ற தேடல் தளங்கள் (Search Engine) பல இருந்தாலும், கூகிள் தான் முன்னணியில் நிற்கிறது. கூகிள் ஒரு நாள் வெளிநிறுத்தம் செய்தாலோ, அல்லது முக்கிய கணினி வலை சேவையகம் (Network Server) பழுதடைந்து போனாலோ, அவ்வளவு தான்! பல வணிக/ பெருநிறுவன அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது!!!

Google Search

கூகிள் - இணைய உலகின் ராஜா. இல்லை...இல்லை.... உலக மகா சக்ரவர்த்தி என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் கூகுளில் தேடுவது எதுவாயினும், நம்முன் வரிசை படுத்தி காட்டிவிடும்; சில சமயங்களில் தேவையில்லாததையும் சேர்த்து. நேற்று பேஸ்புக்கில்  கூகிள் தேடல் பற்றிய ஒரு காணொளி பார்த்தேன். அதை பார்த்த பின்பு தான் இந்த பதிவு எழுத வேண்டும் என தோன்றியது. சொல்ல போனால், அது  கூகுளின் விளம்பரத்திற்காக அவர்களால் வெளியிடப்பட்டது. ஆனால் நாம் எவ்வளவு தூரம் உபயோகப்படுத்துகிறோம் என்று இதை பார்த்தாலே புரியும். பல ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தன் தாத்தாவின் பால்ய சிநேகிதனை, பேத்தி  கூகிள் மூலம் தேடி அழைத்து வருகிறாள் என்பதே இந்த காணொளி.


இதிலேருந்து நமக்கு தெரிவது என்ன ? இணையம் போல எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் நாம் பயன்படுத்துவதில்தான் உள்ளது. நல்லதையே நினைத்து; நல்லதையே செய்வோம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

4 கருத்துகள்:

  1. வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே!!!
    ஒவ்வொரு முறையும் வந்து உங்கள் முத்திரை சொற்களை பதித்து விடுகிறீர்கள் !!!

    பதிலளிநீக்கு
  2. ஜாக்கி சேகர் அண்ணனும் மேற்கூறிய வீடியோ பற்றி ஒரு பதிவெழுதி இருந்தார்..மனதைத்தொட்ட நெகிழ்ச்சியான வீடியோ..நாத்திகர்களும் ஆத்திகர்களும் தினம் தினம் வணங்கும் கடவுள் என்றுகூட சொல்லலாம் கூகுளை...

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி கலியபெருமாள் !
    நீங்கள் சொல்வது சரிதான்...

    பதிலளிநீக்கு

Your Comment is sent for approval.