புதன், 9 செப்டம்பர், 2015

தண்ணீர் ! தண்ணீர் !

வணக்கம்,

உலகில் உள்ள பல பிரச்சனைகளில் மிக முக்கியமானது தண்ணீர் பிரச்சனை தான். ஒருபுறம் பூமி வெப்பமயமாவதால் பனிபாறைகள் உருகி, பல நகரங்கள் கடலுக்கு அடியில் போக வாய்ப்புண்டு என்று சொல்லி வருகின்றனர். இதை தவிர, இன்னும் சில ஆண்டுகளில் குடிக்க நல்ல தண்ணீர் கூட கிடைக்காமல் போகலாம் என்று நம்மை பயமுறுத்துகின்றனர் சிலர். சுற்றுப்புற ஆர்வலர்கள் பலரும் இந்த பசுமையான வளத்தை கொண்ட பூமி, வறண்ட பூமியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லுகின்றனர்.

ஆப்பிரிக்கா போன்ற சில வறண்ட நாடுகள், Dry day is coming என்ற பிரச்சாரத்தை மக்களிடையே பரப்ப ஆரம்பித்து இருக்கின்றனர். அதிகமாக தண்ணீர் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும், அனாவசியமாக தண்ணீர் செலவு செய்யாதிருக்கவும், வரப்போகும் தண்ணீர் பஞ்சத்தை பற்றியும் எடுத்து சொல்கின்றனர். அவ்வாறு நடக்காமலிருக்க, தண்ணீரை நாம் சேமித்து வைக்க வேண்டும் என்பதை முக்கிய விஷயமாக சொல்கின்றனர்.


ஏற்கனவே  கென்யாவில் உள்ள  நைரோபி நகரில், Water ATM எனப்படும் குடிநீருக்கான ஏ.டி.எம்-ஐ அந்த அரசு நிறுவியுள்ளது. கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, குறைந்த விலையில் இதுபோல ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது கென்யா அரசு.


ஐ.நா சபையின் கூற்றுப்படி தண்ணீர் தட்டுப்பாடு உலகின் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று சொல்கிறது. 700 கோடி மக்கள் தொகையை கொண்ட பூமியில், 43 நாடுகள் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் நிலை வரும் என்று அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்க சஹாரா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

இதெல்லாம் எங்கோ, வேறு எதோ நாடுகளுக்கு தான் பொருந்தும் என்ற எண்ணி விட வேண்டாம்.  Water ATM கென்யாவில் மட்டுமல்ல, இந்தியாவில் பல இடங்களில் இருக்கிறது. இப்போதே நிலத்தடி நீர் இந்தியாவில் வறண்டு போய்விட்டது என்று புவுயியல் ஆராய்ச்சி துறை சொல்கிறது. ஒரு சர்வதேச ஆய்வறிக்கையின் படி,
  1. உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில், இந்தியாவின் பங்கு  16%. அதில் 4% பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் இருக்கிறது.
  2. புது தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய  நகரங்கள் உலகின் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த நகரங்களாக மாறபோகிறது.
  3. 2040-ல் இந்தியாவில் குடிக்க தண்ணீரே இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு வர காரணங்களாக இருப்பவை:
  1. காடுகளை அழிப்பதால், மழை பொய்த்து விடுகிறது.
  2. சட்ட விரோத மணல் கொள்ளையினால், ஆற்று தண்ணீர் ஊருவதில்லை. 
  3. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆழ்த்துளாய் கிணறுக்காக 300,400 அடிகள் வரை தோண்டி, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர். குடிக்கவும், விவசாயத்திற்கும் தண்ணீர் போதவில்லை. 
  4. தொழிற்சாலைகளின் கழிவுகளை ஆறு, எரிகளில் கலந்து விடுகின்றனர். நீர்நிலை மாசுபடுவதால், குடிநீர் வீணாகி போகிறது.
இதை தவிர்க்க நாமும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. கீழுள்ள படங்கள் யாவும் ஃபேஸ்புக்கில் 'Logical Indian' பக்கத்தில் பகிரப்பட்டது.











இதை பற்றி  மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வருவோம். நீரின் அவசியத்தை சொல்வோம். தண்ணீரை சேமிப்போம்! உலகின் வளம் காப்போம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

1 கருத்து:

  1. வணக்கம்...

    வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு

Your Comment is sent for approval.