education லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
education லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜூன், 2016

யாருக்காக ? இந்த ப்ராஜெக்ட் யாருக்காக ?

வணக்கம்,

விடுமுறை முடிஞ்சாச்சு. பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கபட உள்ளன. இப்போதுள்ள மாணவ மாணவிகளை பரீட்சைக்கு பிறகு பெரிதும் கிலியூட்டும் ஒரு வார்த்தை ப்ராஜெக்ட் (Project). முன்பெல்லாம் கல்லூரியின் இறுதி ஆண்டில் படிப்பவர்களை மட்டுமே ப்ராஜெக்ட் என்ற ஒன்றை கட்டாயம் செய்து காட்ட வேண்டும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இன்றோ, பள்ளிகளிலும் அந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கதிற்கு வந்து கொண்டிருகிறது.

நான் பள்ளிகளில் படித்த காலத்தில் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் Holiday Homework க்காக பரீட்சையின் வினாத்தாள்களை எழுதி வர சொல்லுவார்கள். நாங்களும் விழுந்து விழுந்து கடைசி நாள் வரை எழுதிவிட்டு, பள்ளி ஆரம்பித்ததும் போய்க் கொடுப்போம். ஆனால் இன்றோ ப்ராஜெக்ட் என்று ஒன்றை செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்லுகின்றனர். அதற்கும் மதிப்பெண் வேறு உண்டு என்று சொல்லிவிடுகின்றனர்.

school projects

ப்ராஜெக்ட் என்பது நல்ல விஷயம் தானே.. பிள்ளைகளின் அறிவு கூடும் என்று யோசிக்க வேண்டாம். அது நல்லது தான் என்றாலும், ப்ராஜெக்ட்  செய்ய ஒரு வயது வரம்பு வேண்டாமா ?? மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை
பிள்ளைகளுக்கு வெவ்வேறு தலைப்புகளில் ப்ராஜெக்ட்  வொர்க்கை கொடுத்து விடுகின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

ப்ராஜெக்ட் வொர்க் என்றால் படங்கள் வாங்கி சார்ட்டில் ஒட்டுவது, பொது அறிவு விஷயங்களை அட்டையில் எழுதி வருவது என்று கொடுத்தால் மாணாக்கருக்கு உதவியாக இருக்கும். விடுமுறையிலும் அவர்கள் எதோ ஒன்றை படித்து தெரிந்து கொள்வது போல இருக்கும். ஆனால் நடப்பது என்ன தெரியுமா??

சில பள்ளிகளுக்கு என்னன்ன தலைப்பை ப்ராஜெக்டாக பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவதில்லை. தேசிய நினைவுச்சின்னங்களை மாதிரி வடிவமைப்பாக தெர்மகொலில்/அட்டையில் செய்து கொண்டு வாருங்கள், உலக உருண்டையின் மாதிரியை சுற்றுவது போல செய்யுங்கள் என்று ஆறாம், எட்டாம் வகுப்பு மாணவரிடம் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் ? சூரிய குடும்பத்தின் மாதிரியை கிரகங்கள் சுழல்வது போல செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். பெரும்பாலும் இந்த ப்ராஜெக்ட்டை ஸ்டெப்பர் மோட்டார் (stepper motor ), பாட்டரி (battery) உதவியுடன் செய்து அசைய/ சுழல வைக்க வைக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களின் உதவியுடன் தான் செய்ய வேண்டும் என்று உத்தரவு வேறு.  இக்கால பிள்ளைகள் நம்மை விட 10 மடங்கு புத்திசாலிகளாகவும், நல்ல திறமைமிக்கவர்களாகவும் இருகின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இது போன்ற பாட திட்டங்களெல்லாம் மிகவும் அதிகம். எல்லா பெற்றோரும் இதெல்லாம் தெரிந்தவராக இருக்க முடியுமா?? இல்லை எல்லாராலும் இதை செய்ய தான் முடியுமா?? என்ன அடிப்படையில் இது போல செய்ய சொல்கிறார்கள் என்ன தெரியவில்லை. இதையும் சில அம்மா அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளுக்காக செய்து கொடுக்கின்றனர் என்பதை ஒப்பு கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.

பள்ளி பிள்ளைகளின் விடுமுறை நேரத்தை சரியான முறையில் செலவழிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, இது போன்று பள்ளி பிள்ளைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தகுதி மீறிய விடுமுறை வீட்டுப்பாடத்தை ப்ராஜெக்ட் என்ற பெயரில் செய்ய சொல்லலாமா? இது எந்த வகையில் நியாயம் என எனக்கு தெரியவில்லை. இந்த கேள்விகளுக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் யாரேனும் தயவு செய்து பதில் சொல்லுங்களேன் !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 14 மார்ச், 2013

சமமான கல்வியால் உயரும் சமுதாயம்


வணக்கம் !!!

ஓர் நல்ல சமுதாயம் வளர நல்ல சிந்தனையும், கல்வியறிவும் தேவை. அந்த கல்வி மக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டியது மிகமிக அவசியம். அப்படி கிடைத்தால் தான் நாட்டிற்கு நல்ல வருங்காலத்தை உருவாக்க முடியும். இப்போதுள்ள கல்விமுறைப்படி அனைவருக்கும் சமமான கல்வியறிவு கிடைக்கிறதா ??????? அதை பற்றி இந்த பதிவில் பார்க்காலம்.

பண்டைய காலம் முதல் 200 ஆண்டுகள் முன்னால் வரை நம் முன்னோர்கள், கல்வி பயில குருகுலத்திற்கு சென்றார்கள். குருகுலம் என்பது ஆசிரியர் வீடாகவோ, கோவிலாகவோ, பொது மண்டபமாகவோ, குளக்கரையிலோ இருந்தது. குருகுலத்திலும் செல்வந்தர் வீட்டு பிள்ளைகளும், ஏழை பிள்ளைகளும் தனித்தனியே கல்வி பயின்றனர். குருகுலத்தில் பாடம் மட்டும் இல்லாமல் வீரம், சரித்திரம்,கலாச்சாரம் ஆகிய அனைத்தும் போதிக்கப்பட்டது. பெரும்பாலும் ஆண்பிள்ளைக்களுக்கே குருகுலத்தில் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டது.


பிறகு, ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்பவரால் 1830-ல் நவீன கல்வி முறையில் தான் ஆங்கில வழி கல்வி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. கணிதம், அறிவியல் போன்ற பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டன.  இதில் தான் பள்ளிக்கு சென்று கல்வி பயிலும் முறை வந்தது. முதலில் இந்த முறை நன்றாக இருந்த போதிலும், காலப்போக்கில் கல்வி பணம் கொழிக்கும் தொழிலாக மாறியது தான் வருத்தமான விஷயம்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் கல்வியறிவு 80.33 சதவிகிதத்ததில் உள்ளது. எல்லா ஆட்சியிலும் உள்ள நலத்திட்டங்களில் இலவச கல்வியும், அனைவருக்கும் கல்வியும் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் போதே
மாநிலம் முழுவதும் சமமான கல்வி கிடைப்பதில்லை.

இப்போதுள்ள கல்விமுறைப்படி, அதாவது மும்முறை தேர்வு முறையின் படியோ  அல்லது சமச்சீர் கல்வியின்படியோ (கடந்த ஆட்சியில்) அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் என்றால் அது சரியல்ல. தமிழகத்தில் மட்டும் மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் (ஸ்டேட் போர்டு), தமிழ்நாடு மேல் நிலை கல்வி வாரியம் (மெட்ரிக்குலேசன் ), ஆங்கிலோ இந்தியன்  கல்வி வாரியம்  என  வாரியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி திட்டங்களின் முலம் கல்வி கற்கும் மாணாக்கருக்கு சமமான கல்வி கிடைப்பதி. எப்படி என கேட்டல், உதாரணத்திற்கு ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனின் பாடத்திட்டமும், தனியார் பள்ளியில் (மெட்ரிக்குலேசன் மாணவனின் பாடத்திட்டமும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலும் அரசு/ அரசு உதவி பெரும் பள்ளியில், மெட்ரிக்குலேசன்  பாடத்திட்டங்களை விட உள்ளடக்கம் குறைவாகவே இருக்கிறது. அதே போல் மெட்ரிக்குலேசன்  பாடத்திட்டத்தில் இருப்பதை விட சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் உள்ளடக்கம்அதிகமாக இருக்கிறது. இதுதான்  சமமான பாடத்திட்டமா ??? இதில் படித்த/ படிக்கும் மாணவருக்கு எப்படி  சமமான  கல்வியறிவு கிடைக்கும் ???

என் கருத்துப்படி இதற்கெல்லாம் ஒரு வழி என்ன என்று கேட்டால், அரசே எல்லா கல்வி நிறுவனங்ககளையும் எடுத்து நடத்த வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாநிலத்தில் உள்ள எல்லா   பள்ளிகளிலும் சமமான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவையெல்லாம் உடனடியாக நடைமுறைக்கு  வராது என்று அறிந்த போதும்,வந்தால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து. ஏனென்றால் முக்கால்வாசி கல்வி நிலையங்கள் சிலஅரசியல்வாதிகளிடமும், பண முதலைகளிடமும் தான் உள்ளது.  நடைமுறைக்கு வந்தால் பலருக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே பள்ளிநிறுவனங்களை நடத்துபவரும்,அதில் பணிபுரியும் ஆசிரியருக்கும் மாற்று வழியை அரசு  செய்ய வேண்டும். அவர்களுக்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை என்றாலும், சமமான கல்விக்கு இது ஓர் நல்ல ஆரம்பமாக அமையும்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்