humour லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
humour லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 ஆகஸ்ட், 2019

உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி ???

வணக்கம்,

மகா ஜனங்களே!!!  ஒரு நிமிஷம். தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ கில்மா சம்பந்தமான பதிவு என நினைத்து அவசரமாக லிங்க் கிளிக் பண்ணி உள்ளே வந்திருந்தால், மன்னிக்கவும். இது அது போன்ற பதிவு அல்ல. இப்போ மேலே படிக்கலாம்.

husband-wife-jokes-tamil

பொதுவாக கணவன் மனைவி ஜோக்குகளில், மனைவியை கிண்டல் செய்வது போல தான் பெரும்பாலும் இருக்கும். நான் பேச்சுலராக இருக்கும் போது அதையெல்லாம் படித்து விட்டு, எப்படி இந்த மொக்கை ஜோக்குக்கெல்லம் சிரிக்கிறார்கள் என யோசித்து கொள்வேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் அதன் முழு அர்த்தமும் புரிய ஆரம்பித்தது. பின்னர் அந்த ஜோக்குகெல்லம் நானும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன். நான் மட்டுமல்ல...பெரும்பாலானோர் இப்படிதான்.

ஏன்?? ஏனென்றால் அந்த கதையிலோ, சிரிப்பிலோ வரும் சம்பவம் அவரர் வீட்டிலும் ஏதோ ஒருமுறையேனும் அப்படிப்பட்ட காட்சியோ/ வாக்குவாதமோ நடந்திருக்கும். அதனால் தான் கணவன் மனைவி ஜோக்குகளுக்கு எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த சிரிப்புகளில் வருவது போல எல்லா பெண்களும் கணவனை சந்தேகிப்பார்களா ? கொடுமை படுத்துவார்களா ?? நிறைய கண்டீஷன் போடுவார்களா ??? இல்லையெனில் ஓயாமல் திட்டி கொண்டே இருப்பார்களா???

கோபம், ஆசை, வெறுப்பு, அன்பு, சந்தேகம், பாசம், இவை அனைத்தும் ஆண் - பெண் ( கணவன் - மனைவி) இருவருக்குமே இருக்கும். இதையெல்லாம் கடந்து தான் போக வேண்டும். எல்லார் வீட்டிலும் இதே கதை தான்.

ஒரு திரைப்பட கலைவிழாவின் போது ஒரு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி சொன்ன வாழ்வின் ரகசியம் இது. மனைவிமார்கள் எப்பொழுதும் அவர்கள் சொல்வதையே கணவன்மார்கள் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது சில நேரங்களில் நடைபெறாத பொது கோபம், சண்டை போன்றவை வரும். இதற்கு ஒரே வழி. விட்டு கொடுத்து போவது தான்.


 ஒரு சண்டை/  விவாதம்/ அல்லது கருத்து வேறுபாடு போன்ற சமாச்சாரங்களில் கணவன் விட்டுக்கொடுத்து மனைவி ஜெயிப்பது போல காட்டிகொண்டால், ஒரு பிரச்னையும் வராது (உண்மையில் கணவன் சொல்வது தான் நடக்கும்). கணவன் ஜெயிப்பது ஒரு முறை மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும், தோற்று போய் மனைவியின் (அன்பை) ஜெயிக்கலாம். பெண்களுக்கு அவர்கள் ஜெயிப்பது போல இருந்தாலும் நாம் தான் இறுதியில் வெல்கிரோம். மனைவியிடம் ஜெயிப்பதை விட குடும்ப வாழ்க்கையில் ஜெயிப்பதே முக்கியம்.


இது தான் உண்மையான வாழ்வின் ரகசியம். இதை தான் பெரும்பாலானோர் பின்பற்றுகிறார்கள்.நானும் தான்!  இந்த ரகசியம் அறிந்த பின், இதை மட்டும் பின்பற்றி பாருங்கள். பிறகு தெரியும் வாழ்வின் இனிமை பற்றி... இனிய வாழ்க்கை ஆரம்பிக்கட்டும்!



நன்றி!!!
பி.விமல் ராஜ்

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

சிரிச்சிடுங்க ப்ளீஸ்...

வணக்கம்,

டென்சன்.. டென்சன்.. டென்சன்.. வர வர எல்லோர்க்கும் வாழ்க்கையில் டென்சன் அதிகமாகி விட்டது.. டென்சனை குறைக்க கொஞ்சம் மனம் விட்டு சிரிக்க வேண்டுமாம். வாட்ஸ் அப்பில் வந்த சில மொக்கை ஜோக்குகளை இங்கு பகிர்ந்துள்ளேன். படிச்சுட்டு மறக்காமல் சிரிச்சிடுங்க...


சிரிப்பு 1:

"வக்கீல் சார்... என் புருஷனுக்கும், மாடி வீட்டு பெண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. எப்படி கண்டுபிடிக்கிறது சார் ?"

"ஒண்ணும் பிரச்னை இல்லை.. உங்க கணவரை அந்த பெண்ணின் வீட்டுக்கு
கூட்டிட்டு போங்க.. வீட்டுக்கு போனவுடன் Wifi ஆட்டோமேடிக்காக கனெக்ட்
ஆயிடுச்சுனா... உங்க சந்தேகம் கன்பாரம் ஆயிடும் ."

#டெக்லானஜி சில சமயம் ஆபத்தானதும் கூட.. :-)

சிரிப்பு 2:

"ஏங்க .. இன்னிக்கி நாம் சாம்பார் வைக்கட்டுமா, இல்ல ரசம் வைக்கட்டுமா??

"முதல்ல.. நீ சமைச்சி வை.. அப்புறம் அதுக்கு பேர் வைச்சிக்கலாம்..."

"???"

சிரிப்பு 3:

"என் மனைவிக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்தேன். அதுக்கப்புறம் 6 மாசமா என் கூட பேசவே இல்லை.."

"ஏன் சார்..? அது டூப்பு நகையா???"

"அதெல்லாம் இல்லப்பா.. அது எங்களுக்குள்ள ஒரு டீல். ஒரு தடவை நகை வாங்கி கொடுத்திட்டா அப்புறம் ஆறு மாசம் நாம ப்ரீ..."

சிரிப்பு 4:

ஒரு பல் மருத்துவமனையில்...

பெண்: டாக்டர்..ஒரு பல் புடுங்க எவ்வளோ செலவாகும்?

டாக்டர்: 850 ரூபாய் ஆகும் மேடம்.

பெண்: 850-ஆ..ரொம்ப அதிகம்.. கொஞ்சம் குறைசிக்க கூடாதா??

டாக்டர்: இது வழக்கமா வாங்குறது தான்..

பெண்: அனஸ்தீஷ்யா கொடுக்காம கொடுத்தா எவ்வளவு ஆகும்..??

டாக்டர்: அப்படி செய்ய முடியாது... ரொம்ப வலிக்கும்...

பெண்: பராவாயில்ல..சொல்லுங்க.

டாக்டர்: அப்படி செய்யறதா இருந்தா 400 ரூபாய் ஆகும்..

பெண்: ஓ ...  உங்க ஜூனியர் யாரைவாது,ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும்.??

டாக்டர்: அதுல தொழில் நேர்த்தி இருக்காது. என்ன ஆனாலும் நான் பொறுப்பல்ல..

பெண்: பராவாயில்ல..

டாக்டர்: அதுக்கு 200 ரூபாய் ஆகும்..

பெண்: உங்க மருத்துவமனையில படிக்கிற பிள்ளையை பக்கத்தில வைச்சிகிட்டு அவங்களுக்கு சொல்லி கொடுத்துட்டு,  உங்க ஜூனியர் யாரைவாது வைச்சி, ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும் டாக்டர்???

டாக்டர்: குட்...ஒண்ணும் வேண்டா.. அப்போ நான்தான் உங்களுக்கு 200 ரூபாய் தரனும்...

பெண்: அப்படியா.. ரொம்ப நல்லது.. நாளைக்கு என் கணவரை பல் புடுங்க கூட்டிட்டு வரலாம்ல...???

டாக்டர்: ????????

சிரிப்பு 5:

கணவன் மாணவி இருவரும் மனம் ஒத்து போகாமல் விவாகரத்துக்காக நீதிமன்றம் வருகின்றனர். நீதிபதி, உங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறது. எப்படி பிரித்து கொள்ள போகிறீர்கள் என்று கேட்டார். நீண்ட யோசனைக்கு பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, நாங்கள் இன்னொரு குழந்தை பெற்று கொண்டு வருகிறோம் என்று கூறினார்கள்.

11 மாதங்களுக்கு பிறகு கழித்து...
.
.
.

அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.. :-)

சிரிப்பு 6:

ராபர்ட்டும் அவரது  மனைவியும் ஜெருசலேமுக்கு செல்கிறார்கள். திடீரென அவரது மனைவி இறந்து விடுகிறார். அவரை அடக்கம் செய்ய அங்குள்ள பாதரியார் ஒருவரை அணுகுகிறார்.

"ராபர்ட்.. உங்க மனைவியை இங்கயே புதைக்க வேண்டுமானால் 100 டாலர் செலவாகும்... உங்கள் ஊருக்கு செல்ல வேண்டுமானால், பாடம் செய்து, பிளேனில் அனுப்ப 10,000 டாலர் செலவாகும் "

கொஞ்சம் யோசித்தவராய்..  நான் ஊருக்கே கொண்டு போய் அடக்கம் பண்றேன்.

உங்க மனைவி மேல அவ்ளோ பிரியமா???

அதெல்லாம் ஒண்ணும் இல்லை... இயேசுநாதர் இறந்தாரு, இங்கயே புதைச்சாங்க.. மூணு நாளைக்கு அப்புறம் உயிர்தெழுந்துட்டார்..   அதான் எதுக்கு ரிஸ்குன்னு...

சிரிப்பு 7:

பெண்மணி: சார்! என் கணவரை காணும் சார்...

போலீஸ்: கடைசியா எப்போ பாத்தீங்க??

பெண்மணி: இரண்டு நாள் முன்னாடி கடைக்கு இட்லி மாவரைக்க போனாரு.. இன்னும் வரல சார்..

போலீஸ்: இரண்டு நாள் ஆச்சா?? அப்போ, இரண்டு நாளா என்ன பண்ணீங்க ??

பெண்மணி: சப்பாத்தி சுட்டு சாப்பிட்டேன் சார்..

சிரிப்பு 8:

டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

மாணவன்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுத்தவேண்டும்..

டீச்சர்: ??!?!?!?

சிரிப்பு 9:

சுப்பாண்டி: நேற்று ரயிலில் சரியாத் தூங்க முடியல...

நண்பர்: ஏன்?

சுப்பாண்டி: மேல் பர்த் தான் கிடைச்சுது.

நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாத்தியிருக்கலாமே?

சுப்பாண்டி: செஞ்சிருக்கலாம்... ஆனா கீழே யாரும் இல்லே.. கடைசி வரை காலியாதான் இருந்துச்சு..

நண்பர்: ???!?!?

சிரிப்பு 10:

தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருவர்..

நபர் 1: யார தேடுறீங்க சார்?

நபர் 2: என் மனைவிய காணும்.. அதான் தேடுறேன்.

நபர் 1: என் மனைவியும் தான் சார் காணோம். நானும் தேடிட்டுதான் இருக்கேன்.

நபர் 2: உங்க மனைவி எப்படி இருப்பாங்க??

நபர் 1: கொஞ்சம் கருப்பா, குள்ளமா, குண்டா இருப்பா..  உங்க மனைவி எப்படி இருப்பாங்க.??

நபர் 1: ம்ம்ம்... நல்ல கலரா, அழகா.. பார்க்க செமையா கும்முன்னு இருப்பா.. நீல கலர் சேலை கட்டியிருப்பா.. ஆங்.. உங்க மனைவி என்ன கலர் சேலை கட்டியிருந்தாங்க???

நபர் 2: அவள விடுங்க சார்...வாங்க..  நாம உங்க மனைவியை தேடலாம்..

சிரிப்பு 11:

மனைவி: (கோவமாக) என்னங்க... வேலைக்காரி குளிக்கும் போது ஏன் எட்டி பாத்தீங்க??

கணவன்: நீ தப்பா நினைக்காதம்மா .. உன்னுடைய  சோப்பு,ஷாம்பு யூஸ் பன்றாலான்னு பாத்தேன்... அவ்வளோதான்...

சிரிப்பு 12:

டீச்சர்: ராமு, கிளாஸ்ல ஏன்டா தூங்கற??

ராமு: அது வந்து மிஸ், உங்க வாய்ஸ் ரொம்ப இனிமையா இருந்துச்சு.. அதான் தூங்கிட்டேன்..

டீச்சர்: அப்புறம் எப்படி மத்தவங்கெல்லாம் முழிச்சிட்டு இருக்காங்க???

ராமு: அவங்கெல்லாம் நீங்க சொல்றத கவனிக்கிறதில்ல மிஸ்...

டீச்சர்: ?!?!?!!

சிரிப்பு 13:
ஒரு டி-சர்ட் வாசகம்...


married-man-t-shirt


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

நச்சுன்னு சில ட்வீட்ஸ் !

வணக்கம்,

சிறு சிறு துணுக்குகள், பொம்மை பட ஜோக்குகள் என்று வந்த காலமெல்லாம் மலை ஏறி போச்சு. ஒன்று, இரண்டு என வார இதழ்களில் மட்டும் வலம் வருகிறது. டுவிட்டரில் போடும் இரண்டு வரி கவிதை, ஹைக்கூ,  நச்சுன்னு ஒரு பன்ச்சு லைன்.. இது தான் இப்போ ஃபேமஸ். இணையத்திலும், அலுவல நண்பர் ஜெகதீசனின் தொகுப்புகளிலிருந்தும், என்னை கவர்ந்த சில "நச் பன்ச்சுகளை" இங்கு பகிர்கிறேன்.


  • அவசரமாக ஒரு வெற்றி தேவை. ஒரு பத்து பேருக்கு அட்வைஸ் பண்ற மாதிரி சின்ன வெற்றியாக இருந்தாலும் பரவாயில்லை!
  • திங்கள் - ள்கங்தி - ங்கள்தி - திள்கங் - ங்திள்க - கள்திங் - திள்ங்த்...
    லிஸ்ட்டுல இதையும் சேத்துக்கனும்! #கருட புராணம்
  • காபி மெஷின்ல நிஜமாவே காபி தான் வருதா??  இல்ல காபி மெஷின கழுவுன தண்ணி வருதா??
  • இட்டு அவி....இட்டவி...இட்டலி...இட்லி..?!
  • மிகச்சிறிய 'மா'வட்டம் தோசைதான்!
  • உடல் நிலை சரியில்லை என்றால் பணக்காரர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கும், ஏழைகள் பெரியாஸ்பத்திரிக்கும் போவார்கள்...!
  • பையனா ? பொண்ணா ? எனக் கேட்டறிந்த பிரசவத்தை, நார்மலா? சிசேரியானா எனக் கேட்கும்படி மாற்றியமைத்தது நவீன மருத்துவம் !
  • முன்னாடி மொபைல் இருந்தா ஆச்சரியப்பட்டாங்க.. அப்புறம் ஃபேஸ்புக்ல அக்கௌண்ட்டான்னு ஆச்சரியப்பட்டாங்க..
    இப்ப மொபைல் இல்லையான்னு ஆச்சரியப்படறாங்க.. இனிமே ஃபேஸ்புக்குல அக்கௌண்ட் இல்லையான்னு ஆச்சரியப்படுவாங்க...
    #முக்கோண வாழ்க்கை 
  • பிள்ளையார் அம்மா அப்பாவை சுத்தி வந்த மாதிரி, நாம ஃபேஸ்புக், ட்விட்டரை சுத்தி வந்தாலே உலகத்தைப் புரிஞ்சிக்கலாம் போல!
  • இக்கரைக்கு அக்கரை பச்சை இல்ல.. வெறும் கான்கிரீட்!
  • எத்தனை சிரமப்பட்டோம் என்பதை வெற்றி பெற்ற பின் சொன்னால் தான் காது கொடுத்துக் கேட்பார்கள்.
  • அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்
  • எதிர் எதிரே கடந்து செல்லும் போது சிறு ஹாரனில் பரிமாறி கொள்ளும் டிரைவர்களின் நட்பும் அழகானதே. கண்டுகொள்ளப்படாமல் இருப்பதும் வரம் தான்!
  • கல்ல தூக்குறது, காளைய அடக்குறது , இந்த வரிசைல தட்கல் டிக்கெட் போடுறதையும் சேத்திடலாம்.. #சர்வர் டௌன் 
  • தாத்தாவுக்கு செல்போன் தெரியாது, பேரனுக்கு சிட்டு குருவி தெரியாது. ஒன்றை தந்துவிட்டு இன்னொன்றை விலையாய் பெறுவதுதான் காலத்தின் கடமை.
  • 'பொதிகை' மட்டுமே இருந்தப்போ ரிமோட்டுக்கு அவசியம் இல்ல, 'ரிமோட்' வந்த பிறகு பொதிகைக்கு வேலையே இல்ல...
  • பேருந்து காதல் கதைகளில், ஹீரோக்கள் ஃபுட்போர்டிலும், ஹீரோயின்கள் ஜன்னல் ஓரத்திலும் உருவாகிறார்கள்! 
  • பையனையோ, பெண்ணையோ பெத்து விஜய் டிவியில் கொடுத்தரனும்; அவனுங்களே பாட்டு, டான்ஸ் சொல்லி தந்து ஹீரோ/ஹீரோயின் ஆக்கி கல்யாணமும் பண்ணிவெச்சுடுவானுங்க..  
  • ஐஸ்கட்டில சட்டை இல்லாம கேப்டன படுக்க வச்சிருப்பானுக, அடுத்தது என்ன நெருப்பான்னு கேப்பாரு பாரு அப்போ துபாய் போனவன் தான் தாவுத்.#நரசிம்மா 
  • ஒரு காலத்துல 'அடை மழை' ன்னு இருந்தது, அப்புறம் 'அட மழை' ன்னு ஆச்சு, இப்போ 'அடடே மழை' ன்னு ஆகிடும் போல!!!
  • பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும். அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்.
  • காம்பளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட், எனர்ஜியான் குடிக்கலானா கூட குழந்தைகள் வளர்ந்துவிடும். ஆனா குழந்தைகள் குடிக்கலானா இந்த கம்பெனிகள் தான் வளர முடியாது...
  • பெங்களூர்ல நான் பாத்ததுலேயே இதான் பெஸ்ட் பிகருங்குற நினைப்பு, ஒவ்வொரு அரைமணிநேரத்துக்கும் மாறுவதுதான் பெங்களூரின் சுவாரஸ்யம். #புதுசாய் குடிபோன ஐ.டி. வாசி. 
  • நதிக்கரைகளில் நாகரீகம் பிறந்தது. நாகரீகத்தினால் நதிகள் இறந்தது.
  • நனைந்து போகும் சிறுமியிடம், "குடைக்குள் வருகிறாயா?" என்றேன். "மழைக்குள் வருகிறீர்களா?", என்றாள்.
  • ஐபோன விட அதிக டெக்னாலஜி டேபிள் மேட்-ல தான்!! டொக்..டொக்..  ஐந்து வித உயரங்கள் , ஆறு வித ஏங்கிள்கள்...அப்பாப்பா....
  • இளையராஜாவின் பாடல்களை இசைக்கும் அனைத்துப் பேருந்துகளுமே சொகுசுப் பேருந்துதான்..
  • சரியாதான் பேரு வச்சிருக்கானுங்க "வலை"தளம்ன்னு.. சிக்குனா வெளியே வரவே முடியாது...
  • உலகிலேயே அதிகமுறை நடித்துக் காட்டப்பட்ட நாடகம் -வயித்து வலி #பள்ளி குழந்தைகள்
  • அடுக்கிவைத்த ஹோம்வொர்க்  நோட்டை ஆசிரியர் திருத்தும்போது, நம்ம நோட் வர்றதுக்குள்ள பீரியட் பெல் அடிச்சிடனும்னு வேண்டிய நாட்கள் இனிமையானவை...  #பள்ளிக்கூடம்
  • ஆட்டோகாரங்களுக்கு பக்கம் கூட தூரம் தான்... ரியல் எஸ்டேட்காரங்களுக்கு தூரம் கூட பக்கம் தான். #பிஸ்னஸ்
  • டாஸ்மாக்ல ஆண்களும், ஜவுளிக்கடைல பெண்களும் ஈசியா ஃப்ரெண்ட் ஆகிடுறாங்க..
  • இன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு'! #தமிழ் மொழி 
  • ஒரு மந்தையில் தொலைந்த இரண்டு ஆடுகள், நேருக்குநேர் சந்திக்கும் போது பேச முடியவில்லையே!! # மட்டன் பிரியாணி
  • வாழ்த்தலும், பாராட்டும் ஒரு வகை ENERGY TRANSFER தான் !
  • எனக்கு என்ன வாங்கி தருவே? - காதலி.
    எனக்கு என்ன வாங்கி தந்துருக்கீங்க? - மனைவி.
    எனக்கு எதுக்கு வாங்கினே? - அம்மா
  • ஏதோ ஒரு புரியாத தேவமொழியில் என்னிடம் பேசிக்கொண்டிருந்தது குழந்தை..வளர்ந்து தொலைத்த வருத்தத்தோடு கேட்டுகொண்டிருந்தேன்.
  • சினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்? #வலைபதிவர்கள் #நான்
  • சிக்னலில் தன் தாய்க்கு பிச்சை இடாதவனையும் பார்த்து கையசைத்து சிரித்து டாட்டா காட்டும் அந்த குழந்தைக்கு முன் மொத்த மனிதமும் வீழ்ந்து விடுகிறது.!
  • ஒரு பஸ். ஒவ்வொரு சீட்டிலும் ஸ்டீரிங் இருக்கும்.  ஒவ்வொரு பாசஞ்சரும் தங்கள் விருப்பம் போல வண்டியை ஓட்டலாம். இப்படி இருந்தால் வண்டி எப்படி நல்லா ஓடும்???  #பார்லிமென்ட் 
  • "யானை" என்ற வார்த்தையில் "னை" யானையின் உருவத்தை ஒத்திருப்பது தமிழ் மொழியின் அழகு.
  • ஆண்மை என்று சொல்லும் போதே கம்பீரமாக இருப்பதும் ; பெண்மை என்று சொல்லும் போதே மென்மையாக இருப்பதும் நம் மொழியின் அருமை #தமிழ்
  • குழந்தையா இருந்தப்ப தட்டி தட்டி தூங்கவெக்க ரொம்ப கஷ்டப்படறோம்...வளர்ந்தப்புறம் தட்டி தட்டி இவங்கள எழுப்பறதுக்குள்ள...உஸ்ஸ்...அப்பாடா....முடியல !!!#அம்மா-அப்பா 
  • அம்மா! நான் பிறந்தப்புறம் அது நான்தான்னு எப்படி கண்டுபிடிச்ச...?? #குட்டி பையன்  
  • (நேற்று) குடிபோதையில் கொட்டும் மழையில் இரு வாலிபர்கள்:  என்னடா அது வெளிச்சம் ??
    "மாப்ளே ! மழையிலே நம்மளை யாரோ போட்டோ எடுக்குறாங்கடா !!!

    (இன்று)  குடிபோதையில் கொட்டும் மழையில் இரு வாலிபர்கள்: என்னடா அது வெளிச்சம் ??
    "மாப்ளே ! கூகிள் எர்த், கூகிள் மேப்ஸ் -க்கு போட்டோ புடிக்கிறாங்க போல !!!
  • சிறுவயதில் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை, முதுமையில் அவளுக்கு உணர்த்திவிட்டால் போதும், என் மரணம் மகிழ்ச்சியானதாய் இருக்கும்!
  • குழந்தை (வெகுளித்தனமாக) : அம்மா, நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்னுடைய பர்ஸையும், நகைகளையும் கொஞ்ச நேரம் குடுத்து பார்த்துக்கொள்ள சொல்லுவியா ?
    அம்மா : அதெப்படி முடியும்…அவளை நான் நம்பவில்லை.
    குழந்தை : அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டுட்டு  போற???!!!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 15 மார்ச், 2014

கொஞ்சம் சிரிங்க பாஸ்....

வணக்கம்,

இப்பதிவு முழுக்க முழுக்க உங்களை சிரிக்க வைக்க மட்டுமே. இணையத்திலும், முகநூலிலும் அலசி உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இந்த துணுக்குகளை ஏற்கனவே எங்கோ படித்த மாதிரி தெரிந்தாலும், மீண்டும் ஒரு முறை படித்து, கொஞ்ச நேரம் சிரித்து மனதை லேசாக்குங்கள்....


சிரிப்பு 1:

அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிக்க ஒரு மெஷின் கண்டு பிடிச்சிருக்காங்க...

அந்த மெஷின் இங்கிலாந்து ல 30 நிமிஷத்துல 70 திருடர்களை  கண்டுபிடிச்சிருக்கு!

ஸ்பெயின் நாட்டுல 30 நிமிஷத்துல 150 திருடர்களை கண்டுபிடிச்சிருக்கு !

இந்தியாவில 15 நிமிஷத்துல
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அந்த மெஷினையே காணோம் !

:-) :-)
----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 2:

மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

பாலு : டேய் ! இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை; வெளியே சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.

பாலு : அப்படியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை; ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்..

*
*
*

சோமு: போச்சு! போச்சு !! நாம தப்பிக்கவே முடியாது

பாலு & வேலு:
ஏன்!!!!!!

சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்...வெளிய சுவரே இல்ல.. நாம ஏறி குதிக்கவும் முடியாது.... சுவர ஓட்ட போட்டும் தப்பிக்க முடியாது....

பாலு: சரி விடுடா .....முதல்ல அவங்க சுவர கட்டட்டும்... நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.!!!??...

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 3:

கிளைடர் ப்ளைட் கிளப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு, பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.

"வாங்க சார்..! வாங்க !! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க!  விமானம்
திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் சார்….!"

ஒரு பயணி நின்றார்.

"பாராசூட் என்ன விலை?"

"இரண்டாயிரம் ரூபாய் சார்.."

"சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?"

”பணம் வாபஸ் ஸார்...”

"............?!?!?!........"

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 4:

குட்டி பையன் தீபக் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?

ஆசிரியை : ஆமாம்...

குட்டி பையன் தீபக் : அப்படின்னா, என் அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில் பேசச் சொல்லட்டுமா?

ஆசிரியை : டேய் முட்டாள்... அஞ்சாம் கிளாஸ் படிக்கும் போதே இப்படியா?? உன் மனசுல என்ன நினைச்சிகிட்டிருக்க?

குட்டி பையன் தீபக் : ஹேய்யா.... நான் டியூசனுக்கு வர்றதைப் பற்றி சொன்னேன்.

கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும் நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா!

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 5:

இரவு தூங்கும் முன் ஒரு தந்தை - மகள் உரையாடல் ...

"ஏன் அப்பா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?"

"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."

"கொசுக்கு வீடு எங்கேப்பா?"

"அதுக்கு வீடே இல்லை..."

"ஏம்பா வீடே இல்லை?"

"அது ரொம்பச் சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."

நான் ரொம்ப சின்னப் பிள்ளைதானே... எனக்கு வீடு இருக்கே."

"இது அப்பா உனக்கு கட்டித் தந்தது."

"அப்போ கொசுவுக்கு அப்பா, அம்மா இல்லையா அப்பா?"

"அந்த அப்பா, அம்மா கொசுவும் ரொம்பச் சின்னதா இருக்கும்ல. அதான் அதுக்கு வீடு இல்ல.."

"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வெச்சது?"

"கடவுள்."

"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா?"

"கடிக்காது."

"ஏம்பா கடிக்காது?"

"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்."

"கடவுள் நல்லவராப்பா?"

"ரொம்ப நல்லவர்."

"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"

"அது அப்படித்தான். நீ தூங்கு."

"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"

"அதுக்குப் பசிக்குது. வாயை மூடிட்டுத் தூங்குடா செல்லம்."

"ஒரே ஒரு கேள்விப்பா? "

"கேட்டுத் தொலை..."

"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"

"அதுக்குப் பல்லே இல்லை..."

"பிறகு எப்படிக் கடிக்கும்?"

"அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாயை மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்."

"பேயைக் கொசு கடிக்குமாப்பா?"

'இப்ப நீ வாயை மூடிட்டுத் தூங்கப்போறியா இல்லையா?"

"நாம தூங்கும்போது வாயும் தூங்குமாப்பா..?"

"..............?!?!?!?!?!?!............."


----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 6:

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ????

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக

வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சனை?”

“அடுப்படியில பிரச்சனை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்...”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“வேற எதுக்காக அவர் விவாகரத்து கேட்கிறார் ???” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 7:

"ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?"

"எப்போ?"

"ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி..."

"ஓ, அதுவா சார் என் வீட்டுகாரர் தான் கூப்பிட்டார், இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்?"

"யாரு பேசுறதுன்னு தெரியலயே?"

"நான் அவரோட மனைவி.. என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனா என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்."

"இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?"

"ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்"
"சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்"

"அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்.."

"சரி எங்கே வர்றாரு?"

"ஆமா எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு"

"ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்..."

ரூம்லேர்ந்து அவர் "ஏண்டி, யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?"

"தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேன்...அந்த நம்பர்லேர்ந்து தான்
ஒருத்தர் கூப்பிட்டாரு..  ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன் மாமா ......"

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 8:

"என்ன பாலாஜி ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"

"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "

"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "

"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி...  "

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 9:

ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்... வெறும் டீ மட்டும் தானா மச்சி ??

வேற என்ன வேணும் ???

கடிச்சிக்க ஏதாவது ??

நாய் இருக்கு..அவுத்து விடவா??

??????
 
----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 10:

தீபக் ஒரு நேர்முக தேர்வுக்காக அலுவலகம் செல்கிறான். எப்படியாவது இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். அலுவலக தேர்வு அறையில்...

மேலாளர்: நான் கேக்குற கேள்விக்கெல்லாம் எதிர்மறையான பதிலை சொல்லணும்..

தீபக்: சரி சார்.. முயற்சி பண்றேன்..

மேலாளர்:  இரவு?

தீபக்:பகல்...

மேலாளர்: புதுமை?

தீபக்:
பழமை..

மேலாளர்:
வறுமை?

தீபக்:
செழுமை..

மேலாளர்:  
வெரி குட்... கரெக்டா சொல்றியே !

தீபக்:
வெரி பேட்...தப்பா சொல்றியே...
 
மேலாளர்:  
ஆங்... ம்ம்ம்...  ஆக்கல்?

தீபக்: 
அழித்தல்...

மேலாளர்:
அழகு?

தீபக்:
ஆபத்து..

மேலாளர்:
தப்பு..

தீபக்:
சரி....

மேலாளர்:
இல்ல தம்பி..நீங்க சொல்றது தப்பு..

தீபக்:
ஆமா அண்ணே ! நான் சொல்றது சரி..
 
மேலாளர்:
ப்ச்.... நீங்க கிளம்பலாம்..

தீபக்:
நீங்க இருக்கலாம்...

மேலாளர்:
போதும்..வெளியே போப்பா !!! 

தீபக்: 
வேணும்..உள்ளே வாப்பா !!!

மேலாளர்:
நிறுத்துடா ...

தீபக்: 
ஆரம்பிடா..

மேலாளர்:
ஐயோ கடவுளே !!! என்ன காப்பாத்து !!

தீபக்:
ஆஹா பிசாசே!! இவனை கொல்லு ...

மேலாளர்:
யு ஆர் ரிஜக்டட் ...

தீபக்:
ஐ ஆம்  செலக்டட் !

மேலாளர்:
?!?!?!..போதும் நீ செலக்டட் தான்.. ஆர்டர் வீடு தேடி வரும்..இப்போ நீ போப்பா..

தீபக்:
ரொம்ப தேங்க்ஸ் சார்.. :-)

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 11:

ஒரு சர்தாஜி ஜோக்...

நியூயார்க்கில் மாநகரில், ஒரு சர்தார்ஜியும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.

அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து சர்தார்ஜியிடம் காட்டி,
"நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?" என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், "உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?" என்று சவால் வேறு விட்டார் சர்தார்ஜியிடம்.

விடுவாரா நம்ம சர்தார்ஜி... "உள்ள வா... உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு",  சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற சர்தார்ஜி, அவனிடம் கேட்டார், ஒரு மேகிக் காட்டுறேன் பார்க்கிறியா?..

கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை  ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்தவர், " எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?."
சர்தார்ஜி அமைதியாக பதில் அளித்தார், " என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு... நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்...'

#சப்பாத்தி சாப்பிட்டாலும் நம்ம ஆளு மூளைக்காரந்தாண்டா...

----------------------------------------------------------------------------------------------------------

 சிரிப்பு 12:

"இருட்டு நகரம்" என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது.

அந்த லைப்ரரியில் இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.

அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு.

அந்தப் பக்கம் இரண்டு Column களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.

இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப் பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்னத் தெரிகிறது?

.
.
.
.
..
.
.
.
யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.

 ----------------------------------------------------------------------------------------------------------
 
 கொஞ்சம் இன்டர்நெட் ஜோக்ஸ் ....








நன்றி !!!

-பி .விமல் ராஜ்