ஞாயிறு, 25 மே, 2014

மக்களின் மனம் கவர்ந்த கோச்சடையான் !

வணக்கம்,

There are Heroes, There are Superheroes, But There is Only One Rajnikanth.

இங்கு ஹீரோக்கள் இருக்கிறார்கள்; சூப்பர் ஹீரோக்களும் இருக்கிறார்கள்; ஆனால் ரஜினிகாந்த், ஒரே ஒருவர் மட்டுமே.

இது தலைவருக்காக சொல்லபட்டதானாலும், அது தான் உண்மை. கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரே உச்சபட்ச நடிகர். இவரை பல்வேறு பாத்திரங்களில், பல்வேறு நடிப்பில், பல்வேறு கோணங்களில் பார்த்துள்ளோம். கருப்பு-வெள்ளை, ஈஸ்ட் மென் கலர், 3D என திரையில் பல வடிவங்களில் ரசித்துள்ளோம். இப்போது மோஷன் கேப்சர் (motion capture) என்னும் புதிய தொழில் நுட்பத்தில், புதிய பரிமாணத்தில் தமிழ் சினிமாவை அடுத்த படிக்கு கொண்டு போக, முதல் அடி எடுத்து  வைத்து நம்மை ஆள வருகிறார் கோச்சடையான்.     

படத்தின் ட்ரெயிலர் வந்த நாள் முதல், படத்தில் அனிமேஷன் சரியில்லை; கார்ட்டூன் படம் போல இருக்கிறது ; கம்ப்யூட்டர் வீடியோ கேம் போல ஆட்கள் இருக்கிறார்கள் என்று குறை கூறப்பட்டது . சொல்லப்போனால் உண்மையும் அது தான். டிரைலரில் ரஜினியின் தாண்டவம், நடந்து வருவது, எல்லாம் பார்த்து ஒரு கார்ட்டூன் படம் என்றே கேலி பேச ஆரம்பித்து விட்டார்கள்.  சூப்பர் ஸ்டார் ஒரு சீனில் நடித்தாலும் படம் ஓடிவிடும் என்று நம்பி கொண்டிருந்தவர்கள், இந்த படம் ஓடாது என்று பகிரங்கமாகவே சொன்னார்கள்; "கோச்சடையான்  பிளாப் ஆக 10 காரணங்கள் " என்று சில இணைய தள ஊடகங்கள் செய்திகளை பரப்பவும் ஆரம்பித்தன.

இதையேல்லாம் பார்த்து கொஞ்சம் யோசித்த தலைவர், கோச்சடையான் படம் வருவதற்கு முன் "லிங்கா"-வை ஆரம்பித்து விட்டார். பொதுவாக ரஜினியின் படம் வந்து சில நாட்களுக்கு பிறகு தான் அடுத்த படத்தின் பேச்சு அடிப்படும். லிங்காவின் இந்த அவசர ஆரம்பத்திற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம்.

ஆனால், இந்த கேலிகூத்தை அடித்து, துவைத்து தன் வழக்கமான பாணியில் ரசிகர்களையும் , மக்களையும் கவர்ந்திழுத்து விட்டார் ரஜினி.
இப்படம் ஆஹா !! ஓஹோ!!!,  இந்தியா சினிமாவில் இது போன்ற கதையே வரவில்லை என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே கருப்பு வெள்ளை படங்களில் பார்த்த  ஒரு சாதாரண கதை தான். அதைதான்  தொழில் நுட்பத்துடன் சேர்த்து, இரண்டு மணி நேரம் நம்மை உட்காரவைத்து, போரடிக்காமல் காட்டுகின்றனர். இரண்டு மணி நேர படத்தில், 6 பாடல்கள்  தான் கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. ஆக மொத்தத்தில்,  குடும்பத்துடன் பார்க்கும் ஓர் நல்ல பொழுது போக்கிற்கான படம் என்று சொல்லலாம்.


படத்தின் background animation நன்றாக உள்ளது. 3டி -யில் பார்பதற்கும், 2டி யில் பார்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் முக அமைப்புதான் சற்று தடுமாற வைக்கிறது... "இவரா அவர் ???? "; "அந்த பெண்ணா அது??? " என்று நம்மையே குழப்பம் அடைய செய்கிறார்கள். அது மட்டும் தான் எனக்கு குறையாக தெரிகிறது. சற்றே பழைய ராஜா காலத்து பழி வாங்கும் கதை என்றாலும், அனிமேஷனுக்காக குழந்தைகளும், ரஜினிக்காக ரசிகர்களும் , பொழுது போக்கிற்காக மற்றவரும் இந்த படத்தை ஒரு முறை தாராளம் பார்க்கலாம்.! 

அவதார், டின்-டின் போன்ற ஆங்கில படங்களோடு ஒப்பிடுபவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். ஹாலிவுட் திரைப்படங்களெல்லாம் 2000 கோடி/ 4000 கோடியில், 5 அல்லது 6 ஆண்டுகளில் தயாரகிறது. இந்தியாவில் 200 கோடியில் அதே அளவில் ரிசல்ட்டை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. நம் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவதார், டின்-டின் போன்ற படங்களை எடுத்த அதே தொழில்நுட்பம் உபயோகிக்கப்படுக்கிறது என்று பட இயக்குனர் சொல்லியிருக்கலாம்.

இந்த 100 வருட இந்திய திரைப்பட வரலாற்றில்,


ராஜா ஹரிசந்திரா (1913) -இந்திய சினிமாவின் முதல் ஊமை படம்.

கீசக வதம் (1918) - தென் இந்திய சினிமாவின் முதல் ஊமை படம்.

ஆலம் ஆரா (1931)  - இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்.
 
கிசான் கன்யா (1937) - இந்திய சினிமாவின் முதல் கலர் படம்.

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) - இந்திய சினிமாவின் முதல் கேவா கலர் படம்.

பானியன் டீர்  (1957) - இந்திய சினிமாவின் முதல் அனிமேஷன் படம்.

ராஜாராஜ சோழன் (1973) - தென் இந்திய சினிமாவின் முதல் சினிமா ஸ்கோப் படம்.

மை டியர் குட்டி சாத்தான் (1984) - இந்திய சினிமாவின் முதல் 3டி படம்.

ராஜா சின்ன ரோஜா (1989) - இந்திய சினிமாவில் முதல் முதலில் அனிமேஷன் கதாபாத்திரங்கள், நடிகர்களுடன் நடித்த படம்.

கோச்சடையான் (2014) - இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் படம்.

அந்த வரிசையில் இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் திரைப்படம் கோச்சடையான் என்று  பெருமையாக சொல்லி கொள்ளாமல் இருக்க முடியாது.

இது ஒரு டை-ஹர்ட் ரஜினி ரசிகனின் விமர்சனம் என்று ஏளனம் செய்தாலும் சரி , அல்லது பொதுவாக ஓர் சினிமா ரசிகனின் பார்வை என்று நினைத்தாலும் சரி. என்னை பொருத்தவரை, கோச்சடையான் - இந்திய சினிமாவின் ஓர் மைல்கல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பட ஆரம்ப பத்து நிமிடம் அவருக்கே புரியவில்லை + பிடிக்கவில்லை என்று சொன்னதாக கேள்விப்பட்டேன்...

இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் ஆரம்பம் என்பதில் அவருக்கும், இயக்குனருக்கும் பாராட்டுக்கள்...

sankaramoorthi சொன்னது…

a centre ok but b and c centre blob bos