திங்கள், 27 அக்டோபர், 2014

திரையை கிழித்த கத்தி !

வணக்கம்,

நான் பொதுவாக சினிமா விமர்சனங்களை என் வலைப்பூவில் எழுதுவதில்லை. இதற்கு முன்னால் 'கோச்சடையான்' பற்றி எழுதியுள்ளேன். அதற்கு அடுத்த விமர்சனம் கத்திக்கு தான். சில காலங்களுக்கு முன்னால் வரை, இளைய தளபதியின் படங்களை பார்க்கவே விரும்பியதில்லை. ஒரே மாதிரியான முக பாவனை, கதை, பன்ச்சு வசனங்கள் என கில்லிக்கு பிறகு, விஜயின் எந்த ஒரு படமும் அவ்வளவாக எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், 'துப்பாக்கி' மற்றும் 'நண்பன்' பார்த்த பிறகு, என் எண்ணத்தை கொஞ்சம் மாற்றி கொண்டேன். மீண்டும் தலைவா, ஜில்லாவில் கடுப்பான நான், இன்று கத்தி பார்த்த பிறகு, இந்த பதிவை எழுதுகிறேன்.

படம் ரிலிஸ் என்று சொன்ன நாள் முதல் எதிர்ப்பு மேல் எதிர்ப்பு. தயாரிப்பு லைக்கா என்பதால், படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று பல தமிழ் இன ஆர்வலர்கள் (?!?!?!?!?) எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் ரிலீசுக்கு முந்துன நாள் லைக்கா பெயரை மட்டும் நீக்கி விடுவதாக கூறி படத்தை வெளியிட்டுள்ளனர்.

சரி... இப்போ படத்துக்குள் வருவோம். ஆரம்பித்த முதல் முக்கால் மணி நேரம், கொஞ்சம் மொக்கையாகவே இருந்தாலும், இடைவேளைக்கு முன் கதைக்குள் வந்துருப்பது நல்ல விஷயம். அவ்வப்போது விஜய், ப்பிளு பிரிண்ட் பார்த்து, பிளான் போடுவது, சில்லறைகளை விட்டேறிந்து அடியாட்களை துவம்சம் செய்வது போன்ற காட்சிகள் மட்டும் லேசாக முதுகை நெளிய வைக்கிறது.

இரண்டு விஜய்க்கும் அழகிய தமிழ் மகனில் வித்தியாசம் காட்டியது போல இல்லாமல், கொஞ்சம் வேற்றுமை காட்டியிருப்பது வரவேற்க்கதக்கது. அமைதியான விஜய், அடிக்கடி கண்சிமிட்டுவது போலவும், சற்றே நடுத்திர வயதுடையவராக காட்டியதும், பறந்து பறந்து அடிக்காமல் எதிரியிடம் அடி வாங்குவது என வேறுபடுத்தி காட்டியுள்ளனர். பட இயக்குனரின் திறமை பொறுத்து தான் விஜயின் நடிப்பு வெளிவரும் என்பதை நீங்களே கத்தியில் பார்க்கலாம்.

டிரைலரில் இரும்பு கம்பியுடன், பைப் லைனில் உட்கார்ந்திருப்பதை பார்த்து, என்ன படத்தில் ஹீரோ ப்பிளம்பரா?  என்று கேலி பேச ஆரம்பித்தனர். ஆனால் படத்தில், அந்த காட்சி வரும் போது  மிகவும் நன்றாகவே இருந்தது. எனக்கு பிடித்த காட்சியும் அதுதான். 


"நம்ம பசிக்கு அப்புறம் சாப்பிடுற ஒவ்வொரு இட்லியும், இன்னொருவருடையது",  என கம்யூனிசம் பேசும் போது ஏ.ஆர். முருகதாஸின் வசனங்கள் தெறிக்கிறது . பிரஸ் மீட்டில் விஜய் பேசும் வசனங்கள் தான் படத்தின் மொத்த பலமே. அதிலே கொஞ்சம் மசாலா தூவப்பட்டிருந்தால், கத்தி எடுத்து நம்மை நாமே குத்தி கொள்ளும் நிலை வந்திருக்கும். நல்ல வேளை! அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

வழக்கம் போல இந்த படத்திலும், ஹீரோயின் சமந்தா நான்கு பாடல்களுக்கு ஆடிவிட்டு, உருகி உருகி ஹீரோவை காதலித்துவிட்டு போகிறார். அவர் வேலை அத்துடன் முடிகிறது. சதீஷ், படம் முழுக்க விஜயுடன் வந்தாலும், சிரிக்கும் படியான காமெடியோ, ஓன்-லைனரோ ஒன்றும் இல்லை. மத்தபடி படத்தில் பாடல்களும் சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை. கத்தி தீம் மியூசிக் மட்டும் படம் முடிந்த பின்னும், நம் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.

விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்பது, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது, கார்ப்ரேட்க்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது, மீத்தேன் வாயு எடுப்பது, விவசாயி தற்கொலை என விவசாயிகளின் கஷ்டங்களை தெளிவாக படம் போட்டு காட்டியுள்ளார். கோகோ கோலா நிறுவனம் தாமிரபரணி ஆற்றில் தண்ணிர் எடுப்பது, கிங் பிஷ்ஷர் விஜய் மல்லையாவை சாடியிருப்பது, 2ஜி ஊழல் என பார்க்கும் எல்லா இடங்களிலும் இயக்குனர் சதம் அடித்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்காமல் போகாது. 

படத்தை படமாக பார்க்காமல், சிலர் புரட்சியாக பேசுவது போல, விஜய் கோகோ கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு, இப்போது அந்த கம்பெனிக்கே எதிராக பேசுவது போல மக்களை எமாற்றுகிறார் என சமூக வலைதளங்களில் அரைகூவல் விட்டு கொண்டிருகின்றனர். இந்த அரைவேற்காடுகளுக்கு வேற வேலையே இல்லை. அதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

தைரியமாக இது போன்ற சமூக கருத்துகளை, சரியான மசாலா கலவையுடன் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு ஒரு "ராயல் சல்யூட்!".
எதிப்பாளர்களையும், கார்ப்ரேட்க்ககளின் முகத்திரையையும் கிழித்து கொண்டு வந்த கத்தி, உண்மையாகவே ஒரு கூரான குத்துவாளாக தான் மக்களிடையே தெரிகிறது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

4 Comments:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

அருமையான விமரிசனம் நண்பரே ...அரைவேக்காடுகள் பற்றிய தங்கள் கருத்து மிக சரியானது

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரூபன் அவர்களே!!!!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி Vijaiy Muthiyah அவர்களே!!!!