சனி, 22 ஆகஸ்ட், 2015

நம்ம சென்னை 377 !

எல்லாத்துக்கும் வணக்கம்பா,

இன்னைக்கி 'மெட்ராஸ் டே' வாம். இன்னையோட நம்ம சென்னை சிட்டிக்கு 377 ஆவது வருசம் ஆரம்பிக்குதாம். எவரோ சென்னப்ப நாயக்கராண்ட 1639 வருசத்தில ஆகஸ்ட் மாசம்  22 ஆம் தேதி, மூணு மைல் இடத்த வெள்ளைக்கார இங்கிலிஸ் துரைங்க வாங்கி, சென்னைபட்டணம்-ன்னு  பேரு வெச்சானாம்மா.

அதுகோசம் எல்லாருமே பேஸ்புக்ல, டுவிட்டர்ல வாய்த்து செய்தி போட்டுன்னுகிறாங்க.. அதே மேரி நானும் என் பங்குக்கு சலாம் போட்டுகிறேன்..

சென்னையை பத்தி என்னோட பழைய பேப்பர்-ல நிறைய தபா கிறுக்கிட்டேன். அதோட ரிப்பீட்டு தாமே இது. படிச்சு குஜாலா இருங்க..

பதிவு 1:
நமது சென்னையின் வரலாற்றை சுருங்க சொல்ல வேண்டுமானாலும் கூட குறைந்தபட்சம் முதலாம் நூற்றாண்டு வரையாவது போக வேண்டும்.
So கி.பி .1-ஆம். நூற்றாண்டு...

கி.பி. 1-ஆம். நூற்றாண்டில் (52-70), ஏசு கிறுஸ்துவின் சீடர்  செயின்ட் தாமஸ் (St. Thomas) மயிலாப்பூரில்  மத போதகம் செய்துள்ளார். கி.பி. 5-ஆம். நூற்றாண்டில், திருவள்ளுவர் பாண்டிய மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தவர். கி.பி. 16-ஆம். நூற்றாண்டில் சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விரிவாக்கப்பட்டது.

தர்மாலா சென்னப்ப நாயக்கரரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர் . புனித ஜார்ஜ் கோட்டைக்கு (St. George Fort) அடித்தளம் போடப்பட்டது.

மேலும் சென்னையின் வரலாற்றை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

madras-day-377
நானே டிசைன் பண்ண நம்ம சென்னையின் அடையாளங்கள் 

பதிவு 2: 
எல்லாரும் சொல்றது சென்னையில பயங்கர ட்ராபிக், ரொம்ப தூசு/புகை, கடுமையான விலைவாசி, அதிக ஜனத்தொகை, வெயில் ஜாஸ்தி, என்னும் என்னனவோ... தெரியாம தான் கேக்றேன், அவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு என்ன இ....துக்கு இங்க வரணும்?  உங்க ஊரிலேயே குப்பையை கொட்டிக்க வேண்டியது தானே. இவங்களால சென்னைக்கே வராதவங்க கூட, சென்னை இப்படி தான் இருக்குன்னு நினைச்சுகிறாங்க.

மத்தவங்க மாதிரி சென்னையிலே ஷாப்பிங் மால் இருக்கு, தீம் பார்க் இருக்கு, பெரிய ஸ்டார் ஓட்டல்கள் இருக்கு, பெரிய பீச் இருக்கு, மூர் மார்கெட் இருக்கு, இங்கு எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லமாட்டேன். மக்களுக்கு தேவையான சாப்பாடு, வீடு, துணிமணி, வைத்தியம், வேலைக்கு ஏத்த சம்பளம்,  நிம்மதியான வாழ்க்கை  என சராசரி மனிதன் வாழ தேவையானது எல்லாம் இருக்கு.

மேலும் சென்னையின் சிறப்பை படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

பாத்தியா நைனா.. சென்னைக்கு எம்மாம் பெரிய ஹிஸ்டிரி, எவ்ளோ விசேஷம் கீதுன்னு. சோக்கா சொல்றியே சென்னை படா பேஜாருன்னு.. இங்க வந்து வாழ்ந்து பாத்தா தாமே தெரியும் எங்க ஊரு எப்படீன்னு... ஆட்டோ ஓட்டுறவன், மீன் புடிக்கிறவன், சாக்கடை அள்ளுறவன், பாங்க் வேலை பாக்கிரவன், கவர்மெண்ட் ஆபிசர், கம்ப்யூட்டர் கம்பெனி வேலைக்காரன், இப்படி எல்லாருமே இங்கே பொயப்புக்காக தான் இங்க அல்லாடுறான். சந்தோசமா புள்ள குட்டியோட கீறான். ஒன்னொரு தபா எவனாவது சென்னையில ஒண்ணும் இல்ல, கலீஜு, கப்பு தாங்கலன்னு பீலா வுட்டான் .. நான் செம காண்டா ஆயிடுவேன்..படவா..கீசிடுவேன் கீசி..  உஷாரா இருந்துக்கோ.. பி கேர்புல் !

அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டரு. படிச்சிட்டு சும்மா போவாம, இத்த உன்னோட பேஸ்புக், டுவிட்டர்-ல ஷேர் பண்ணிட்டு, அப்டியே ஷேர் ஆட்டோல அப்பீட் ஆயிடு.. சர்தானா..வரேன்ப்பா ..


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

4 Comments:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

கரூர்பூபகீதன் சொன்னது…

சூப்பராக்கீது தோஸ்த் !!


நன்றிபா!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்.

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி பரிவை சே.குமார் & கரூர்பூபகீதன் !!!!