ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

புல்லுக்கு இரைத்த நீர்!

வணக்கம் ,

இந்தியா ஏழை நாடு என சிலர் சொல்கிறார்கள். பண புழக்கம் கம்மியாய் இருக்கிறதாம். நம்முடைய பணம் எப்படியெல்லாம் வீணாகிறது தெரியுமா? கீழுள்ள சில செய்தி துணுக்குகளை பாருங்கள். இவ்வளவு பணம் புழங்குகிறது என உங்களுக்கே புரியும்...


14.5
லட்சம் கோடி ரூபாய் வரியாக கடந்த ஆண்டில் இந்தியாவில் வசூலிக்கப்படுள்ளது.

30
லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணமாக வெளிநாட்டு வங்கிகளில் இருக்கிறது என சி.பி.ஐ ஆய்வறிக்கை சொல்கிறது.

10
லட்சம் கோடிக்கு மேல் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.

9
கோடியே கோடி ரூபாய் (910,603,234,300,000 INR ) ஊழல் கடந்த 68 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்துள்ளது.

90
இந்தியாவிலுள்ள உலக மகா கோடீஸ்சுவரர்களின் எண்ணிக்கை.

61,000
இந்திய கோடீஸ்சுவரர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

30,000
டன் அளவுள்ள தங்கம் ஒவ்வொரு ஆண்டும் கோவில்களால் வங்கிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.

1.5
லட்சம் கோடி மதிப்புள்ள புதையல் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.

5,000
கோடி. அரசியல் கட்சிகளுக்கு தானமாகவும், வருமானமாகவும் வருகிறது என ஓர் புள்ளி விவரம் சொல்கிறது.

1,400
கோடி. செய்திதாள்களில் கட்சி விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகை.

1,800
கோடி கட்சி விளம்பர பதாகைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

4,800
கோடி தொலைகாட்சியில் கட்சி விளம்பரதிற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

29,000
ரூபாய் தண்டமாகிறது, ராஜ்ய சபாவில் வீணடிக்கடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும்.

3
லட்சம் கோடி பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடனாக இருக்கிறது என ரிசர்வ் வங்கி ஆய்வு சொல்கிறது.

35
கோடி வீண். ராஜ்ய சபாவில் கடந்த குளிர்கால கூட்ட தொடரை நடக்க விடாமல் செய்ததால்.

1000
கோடி மதிப்புள்ள தங்கம் கடந்த ஆண்டில் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு பிடிபட்டுள்ளது.

71,000
கோடி வங்கி கடன் விவசாயிகளுக்காக தள்ளுபடி செய்ய பட்டுள்ளது.

1975
கோடி ஐ.பி.எல்-லில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்க பிரிவு சொல்கிறது.

2.27
லட்சம் கோடி இலவச திட்டங்களுக்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றுகிறது? நம் நாட்டில்
எவ்வளவு பணம் வீணாகிறது பாருங்கள். இவ்வாறு புல்லுக்கும், கதிருக்கும் இரைக்கப்பட்ட நீரை தவிர்த்தாலே நாடு வளமும், வளர்ச்சியும் அடையும்.

குறிப்பு - ஆனந்த விகடனில் இது போன்ற புள்ளி விவரங்கள் சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. அதை போல நாமும் எழுதலாம் என்று எண்ணி, இணையத்தில் பல தளங்களில் தேடி சேகரிக்கப்பட்டதை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்




இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

3 Comments:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

புள்ளி விவரங்களை பார்க்கையில் பகீர் என்கிறது!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல தொகுப்பு.... பகிர்வுக்கு நன்றி.

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி தளிர் சுரேஷ் & பரிவை சே.குமார் ...