ஞாயிறு, 25 அக்டோபர், 2015

சிரிச்சிடுங்க ப்ளீஸ்...

வணக்கம்,

டென்சன்.. டென்சன்.. டென்சன்.. வர வர எல்லோர்க்கும் வாழ்க்கையில் டென்சன் அதிகமாகி விட்டது.. டென்சனை குறைக்க கொஞ்சம் மனம் விட்டு சிரிக்க வேண்டுமாம். வாட்ஸ் அப்பில் வந்த சில மொக்கை ஜோக்குகளை இங்கு பகிர்ந்துள்ளேன். படிச்சுட்டு மறக்காமல் சிரிச்சிடுங்க...


சிரிப்பு 1:

"வக்கீல் சார்... என் புருஷனுக்கும், மாடி வீட்டு பெண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. எப்படி கண்டுபிடிக்கிறது சார் ?"

"ஒண்ணும் பிரச்னை இல்லை.. உங்க கணவரை அந்த பெண்ணின் வீட்டுக்கு
கூட்டிட்டு போங்க.. வீட்டுக்கு போனவுடன் Wifi ஆட்டோமேடிக்காக கனெக்ட்
ஆயிடுச்சுனா... உங்க சந்தேகம் கன்பாரம் ஆயிடும் ."

#டெக்லானஜி சில சமயம் ஆபத்தானதும் கூட.. :-)

சிரிப்பு 2:

"ஏங்க .. இன்னிக்கி நாம் சாம்பார் வைக்கட்டுமா, இல்ல ரசம் வைக்கட்டுமா??

"முதல்ல.. நீ சமைச்சி வை.. அப்புறம் அதுக்கு பேர் வைச்சிக்கலாம்..."

"???"

சிரிப்பு 3:

"என் மனைவிக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்தேன். அதுக்கப்புறம் 6 மாசமா என் கூட பேசவே இல்லை.."

"ஏன் சார்..? அது டூப்பு நகையா???"

"அதெல்லாம் இல்லப்பா.. அது எங்களுக்குள்ள ஒரு டீல். ஒரு தடவை நகை வாங்கி கொடுத்திட்டா அப்புறம் ஆறு மாசம் நாம ப்ரீ..."

சிரிப்பு 4:

ஒரு பல் மருத்துவமனையில்...

பெண்: டாக்டர்..ஒரு பல் புடுங்க எவ்வளோ செலவாகும்?

டாக்டர்: 850 ரூபாய் ஆகும் மேடம்.

பெண்: 850-ஆ..ரொம்ப அதிகம்.. கொஞ்சம் குறைசிக்க கூடாதா??

டாக்டர்: இது வழக்கமா வாங்குறது தான்..

பெண்: அனஸ்தீஷ்யா கொடுக்காம கொடுத்தா எவ்வளவு ஆகும்..??

டாக்டர்: அப்படி செய்ய முடியாது... ரொம்ப வலிக்கும்...

பெண்: பராவாயில்ல..சொல்லுங்க.

டாக்டர்: அப்படி செய்யறதா இருந்தா 400 ரூபாய் ஆகும்..

பெண்: ஓ ...  உங்க ஜூனியர் யாரைவாது,ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும்.??

டாக்டர்: அதுல தொழில் நேர்த்தி இருக்காது. என்ன ஆனாலும் நான் பொறுப்பல்ல..

பெண்: பராவாயில்ல..

டாக்டர்: அதுக்கு 200 ரூபாய் ஆகும்..

பெண்: உங்க மருத்துவமனையில படிக்கிற பிள்ளையை பக்கத்தில வைச்சிகிட்டு அவங்களுக்கு சொல்லி கொடுத்துட்டு,  உங்க ஜூனியர் யாரைவாது வைச்சி, ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும் டாக்டர்???

டாக்டர்: குட்...ஒண்ணும் வேண்டா.. அப்போ நான்தான் உங்களுக்கு 200 ரூபாய் தரனும்...

பெண்: அப்படியா.. ரொம்ப நல்லது.. நாளைக்கு என் கணவரை பல் புடுங்க கூட்டிட்டு வரலாம்ல...???

டாக்டர்: ????????

சிரிப்பு 5:

கணவன் மாணவி இருவரும் மனம் ஒத்து போகாமல் விவாகரத்துக்காக நீதிமன்றம் வருகின்றனர். நீதிபதி, உங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறது. எப்படி பிரித்து கொள்ள போகிறீர்கள் என்று கேட்டார். நீண்ட யோசனைக்கு பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, நாங்கள் இன்னொரு குழந்தை பெற்று கொண்டு வருகிறோம் என்று கூறினார்கள்.

11 மாதங்களுக்கு பிறகு கழித்து...
.
.
.

அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.. :-)

சிரிப்பு 6:

ராபர்ட்டும் அவரது  மனைவியும் ஜெருசலேமுக்கு செல்கிறார்கள். திடீரென அவரது மனைவி இறந்து விடுகிறார். அவரை அடக்கம் செய்ய அங்குள்ள பாதரியார் ஒருவரை அணுகுகிறார்.

"ராபர்ட்.. உங்க மனைவியை இங்கயே புதைக்க வேண்டுமானால் 100 டாலர் செலவாகும்... உங்கள் ஊருக்கு செல்ல வேண்டுமானால், பாடம் செய்து, பிளேனில் அனுப்ப 10,000 டாலர் செலவாகும் "

கொஞ்சம் யோசித்தவராய்..  நான் ஊருக்கே கொண்டு போய் அடக்கம் பண்றேன்.

உங்க மனைவி மேல அவ்ளோ பிரியமா???

அதெல்லாம் ஒண்ணும் இல்லை... இயேசுநாதர் இறந்தாரு, இங்கயே புதைச்சாங்க.. மூணு நாளைக்கு அப்புறம் உயிர்தெழுந்துட்டார்..   அதான் எதுக்கு ரிஸ்குன்னு...

சிரிப்பு 7:

பெண்மணி: சார்! என் கணவரை காணும் சார்...

போலீஸ்: கடைசியா எப்போ பாத்தீங்க??

பெண்மணி: இரண்டு நாள் முன்னாடி கடைக்கு இட்லி மாவரைக்க போனாரு.. இன்னும் வரல சார்..

போலீஸ்: இரண்டு நாள் ஆச்சா?? அப்போ, இரண்டு நாளா என்ன பண்ணீங்க ??

பெண்மணி: சப்பாத்தி சுட்டு சாப்பிட்டேன் சார்..

சிரிப்பு 8:

டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

மாணவன்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுத்தவேண்டும்..

டீச்சர்: ??!?!?!?

சிரிப்பு 9:

சுப்பாண்டி: நேற்று ரயிலில் சரியாத் தூங்க முடியல...

நண்பர்: ஏன்?

சுப்பாண்டி: மேல் பர்த் தான் கிடைச்சுது.

நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாத்தியிருக்கலாமே?

சுப்பாண்டி: செஞ்சிருக்கலாம்... ஆனா கீழே யாரும் இல்லே.. கடைசி வரை காலியாதான் இருந்துச்சு..

நண்பர்: ???!?!?

சிரிப்பு 10:

தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருவர்..

நபர் 1: யார தேடுறீங்க சார்?

நபர் 2: என் மனைவிய காணும்.. அதான் தேடுறேன்.

நபர் 1: என் மனைவியும் தான் சார் காணோம். நானும் தேடிட்டுதான் இருக்கேன்.

நபர் 2: உங்க மனைவி எப்படி இருப்பாங்க??

நபர் 1: கொஞ்சம் கருப்பா, குள்ளமா, குண்டா இருப்பா..  உங்க மனைவி எப்படி இருப்பாங்க.??

நபர் 1: ம்ம்ம்... நல்ல கலரா, அழகா.. பார்க்க செமையா கும்முன்னு இருப்பா.. நீல கலர் சேலை கட்டியிருப்பா.. ஆங்.. உங்க மனைவி என்ன கலர் சேலை கட்டியிருந்தாங்க???

நபர் 2: அவள விடுங்க சார்...வாங்க..  நாம உங்க மனைவியை தேடலாம்..

சிரிப்பு 11:

மனைவி: (கோவமாக) என்னங்க... வேலைக்காரி குளிக்கும் போது ஏன் எட்டி பாத்தீங்க??

கணவன்: நீ தப்பா நினைக்காதம்மா .. உன்னுடைய  சோப்பு,ஷாம்பு யூஸ் பன்றாலான்னு பாத்தேன்... அவ்வளோதான்...

சிரிப்பு 12:

டீச்சர்: ராமு, கிளாஸ்ல ஏன்டா தூங்கற??

ராமு: அது வந்து மிஸ், உங்க வாய்ஸ் ரொம்ப இனிமையா இருந்துச்சு.. அதான் தூங்கிட்டேன்..

டீச்சர்: அப்புறம் எப்படி மத்தவங்கெல்லாம் முழிச்சிட்டு இருக்காங்க???

ராமு: அவங்கெல்லாம் நீங்க சொல்றத கவனிக்கிறதில்ல மிஸ்...

டீச்சர்: ?!?!?!!

சிரிப்பு 13:
ஒரு டி-சர்ட் வாசகம்...


married-man-t-shirt


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 3 அக்டோபர், 2015

புலி - விமர்சனம்

வணக்கம்,

இது ஒரு ராஜா கால பாண்டஸி படம் என்பதாலும், இயக்குனர் சிம்பு தேவன் படம் என்பதாலும் பார்க்க வேண்டும் ஆவல் இருந்து வந்தது. ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, இது ஒரு பாண்டஸி கலந்த சயின்ஸ் பிக்ஷன் படம்; விஜய் டைம் ட்ராவல் செய்து அதிசிய உலகத்துக்கு போகிறார் என்று கூறினார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் இது ஆங்கில படமான "ஜான் கார்டர்" -ன் ரீமேக் என்று சொன்னார்கள். இது எப்படியோ படத்தின் பப்ளிசிட்டிக்கு இந்த பில்டப்கள் போதும் என முடிவு செய்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பிறகு படம் வெளிவந்துள்ளது.


வியாழக்கிழமை மதியமே படத்தை பற்றி இணையத்தில் கிழி..கிழி..கிழியென கிழிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் புக் பண்ண டிக்கெட்டை விற்க முடியாமல் போனதால், மனதைரியத்தை வரவைத்து கொண்டு படம் பார்க்க தயாரானேன்.

கதையென்று பெரிதாக ஒன்றும் இல்லை. பழைய அம்புலிமாமா கதை தான். வேதாள கோட்டைக்கு  உட்பட்ட ஊர்களை வேதாளங்களின் மகாராணி ஆள்கிறார். சூழ்ச்சிக்கார தளபதியின் கட்டுபாட்டில் இருக்கிறது அந்த கோட்டை. அதை மீட்டு ராணியிடம் கொடுக்கிறார் நம்ம இளைய தளபதி. படம் பார்க்கும் போதே இதுதான் நடக்குமென நமக்கே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு வீக்கான ஸ்கிர்ப்ட்.

படத்துக்கு சுவாரசியம் சேர்க்க, பேசும் பறவை, ஒற்றைக்கண் ராக்ஷச மனிதன், பெரிய சைஸ் கரும்புலி, பேசும் ஆமை என குழந்தைகளுக்கு பிடிப்பது போல கதை நகர்கிறது. கிராபிக்ஸ் நன்றாக இருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

இளைய தளபதி விஜய் ஏன் எவ்வளவு ரிஸ்க் எடுத்து இது மாதிரியான கதையில் நடித்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சுத்தமாக விஜய்க்கு இந்த கதைக்களம் செட் ஆகவில்லை. இதில் இரண்டு விஜய் வேறு. பிளாஷ் பேக்கில் வரும் விஜய் , அப்பப்பா.. செம மோசம். நீளமான முடியும், ஆக்ரோஷமான பேச்சும் (?!?!)  அவருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவே இல்லை.

கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன், துணை நாயகியாக ஹன்சிகா. இருவரும் வந்து கவர்ச்சி காட்டி ஆடிவிட்டு சென்றிருகின்றனர். சுதிப் வில்லனாக, நாட்டின் தளபதியாக கோபம் காட்டி சென்றுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் ஸ்ரீதேவி நடித்துள்ளார். ஒரு பாண்டஸி கதைக்கு தேவையான கதாபாத்திரமாக, வேதாள ராணியாக நடித்திருக்கிறார். மற்றவர்கள் கதையில் வந்து செல்கின்றனர்.

முன்பே சொன்ன மாதிரி ஒரு பாண்டஸி படம் என்பதால், லாஜிகெல்லாம் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. ஒரு மாயாஜால படத்துக்கு தேவையான எல்லாமே இருக்கு.  பாடல்கள் எதுவுமே ராஜ காலத்து பட பாடல் போல இல்லை. எந்த பாடல் வரியும் மனதில் கூட நிற்கவில்லை.

விஜய் நடித்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகி போகவே, படம் ஃபிளாப் என்று எல்லா ஊடகங்களும் சொல்லிவிட்டது. படமும் ஹ்ம்ம்... நன்றாக இல்லை தான். கொஞ்சம் திரைக்கதையில் மட்டும் கவனம் வைத்திருந்தால் படம் சூப்பரோ சூப்பராகி இருக்கும். இதுவே விஜய்க்கு பதில் வேறு யாராவது சாதாரண  நடிகர் நடித்திருந்தால் கூட படம் கொஞ்சம் ஓடியிருக்கும்.

கிராபிக்ஸ் மற்றும் ஃபாண்டஸி கதைக்காக சிறுவர்,சிறுமியர் ஒரு முறை பார்ப்பார்கள். மத்தபடி இது பாயாத புலி, சீறாத புலி. இது வெறும் புலி. சாதாரண புலி, வரி கட்டாத புலி. மொத்தத்தில் இது டம்மி புலி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 1 அக்டோபர், 2015

கல்லூரி கட்ட பஞ்சாயத்துக்கள் - திணறும் மாணவ / மாணவிகள் !

வணக்கம்,

பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் சேரும் போது, பசங்க எல்லோரும் மனதில் பல கனவுகளோடு, ஆசைகளோடு வருவார்கள். காலேஜுல நிறைய நண்பர்கள், நண்பிகள்  கிடைப்பார்கள், ஜாலியா சுதந்திரமா இருக்கலாம், நண்பர்களோட பேசலாம்ன்னு பல கனவுகளோட வருவாங்க. ஆனால் அவுங்க கனவையெல்லாம் தவிடு பொடியாக்குகிறது சில பொறியியல் கல்லூரிகள்.

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி - நான் இந்த காலேஜுல தான் படிச்சேன். நாம படிச்ச கல்லூரியை எவனாவது தப்பா சொல்லிடான்னா பொதுவா எல்லோரும் சண்டைக்கு வருவாங்க. ஆனா, இங்க நிலைமையே வேற. காலேஜ பத்தி ஒரு தப்பான மெசேஜ் வந்ததும் 'என்ன ஒரு ஆனந்தம்' நம்ம மக்களுக்கு (Aluminis). கடந்த இரு வாரங்களாகவே சமூக வலைதளங்களில் பெரிதும் அடிப்படும் பெயராகவே இருக்கிறது எங்கள் கல்லூரி. கல்லூரியில் மாணவிகள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் என ஒரு பக்க நீள ரூல்ஸ் சர்குலரை சமூக தளங்களில் வெளியிட்டதே காரணம். அதை அங்கு படித்த மாணவர்கள் தான் கல்லூரியின் மீதுள்ள வெறுப்பு காரணமாக வெளியிட்டுனர் என்றாலும், அதிலுள்ள விதிகள் பெரும்பாலும் உண்மையாகவே அமலில் இருப்பது கசக்கும் உண்மை.


அதாகப்பட்டது, இவை தான் அந்த சட்டங்கள். காலேஜ பத்தி தெரியாதவங்க படிங்க..

1.) சாய்ராம் கல்லூரியில் படிக்கும் பெண்கள் லெகின்ஸ், ஜெகின்ஸ் போன்ற வகை பேண்ட்டெல்லாம் போட கூடாது.

2.) பாட்டியாலா, ஜன்னல், கண்ணாடி  வைத்த டாப்ஸ், ஷார்ட் குர்தி போன்றவைகளுக்கும் தடை.

3.) பெரிய சைஸ் காது வளையம், ஜிமிக்கி வகையறாக்கள், ஃபான்சி மோதிரங்கள், ஹை-ஹீல்ஸ் செருப்புகள் , சிகை மற்றும் முக அலங்காரங்கள் போன்றவைக்கும் தடா தான்.

4.) துப்பட்டா கண்டிப்பாக மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டும். ( நானே லிஸ்டில் சேர்த்து கொண்டது. )

5.) கல்லூரியில் பிறந்த நாள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது. சாக்லேட், கேக், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டங்கள் எல்லோருக்கும் பரிமாறிக் கொள்ள கூடாது.

6.) அனாவசியமாக காரிடாரில் நடக்க கூடாது. பக்கத்துக்கு கிளாசுக்கு சென்று லேப் கோட், நோட் புக்ஸ், கால்சி  போன்றவை வாங்க கூடாது.

7.) செல்போன், சிம் கார்ட், பெண் டிரைவ் போன்றவைகளை உள்ளே கொண்டு வர கூடாது.

8.) கல்லூரி பேருந்தில் தான் பணம் கட்டி வர வேண்டும் (எவ்வளவு கிட்ட இருந்தாலும்). டூ-வீலர், ஃபோர் வீலர்கள் கொண்டு வர கூடாது.

9.) பெண்களும், ஆண்களும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட படிக்கட்டில் தான் ஏற/இறங்க வேண்டும்.

10.) மிக முக்கியமானது. இரு பாலரும் எதிர் பாலினத்தோடு எக்காரணத்துக் கொண்டும் பேச கூடாது.

11.) நான்-வேஜ் அயிட்டங்களை கல்லூரிக்குள் கொண்டு வர கூடாது.

12.) ஹாஸ்டல் பசங்க நினைத்த நேரத்தில் வீட்டுக்கு போக முடியாது. கேட்-பாஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.

இந்த ஏட்டில்லா  விதிகளை பார்த்தாலே எவனுக்கும் படிக்கிற ஆசையே இருக்காது. என்ன தலை சுத்துதா???இது சும்மா டிரைலர் தான்மா. மெயின் பிச்சர் இனிமே தான்...

செமஸ்டரில் பெயிலானால், இரு அரியர்களுக்கு மேல் வைத்தால், பெற்றோரை அழைத்து வர வேண்டும். பையன் பெயிலானால் அம்மாவோ, அப்பாவோ தான் திட்டு வாங்க வேண்டும். "புள்ளைய காலேஜுல சேர்த்துவிட்டுட்டு, அப்படியே தண்ணி தெளிச்சி விட்டுவிடுவியா??" என ஒருமையில் அவர்களை திட்டுவார்கள். பலரை பலவந்தமாக நான்காம் அல்லது ஐந்தாம் செமஸ்டரில் கல்லூரியை விட்டு (டி .சி கொடுத்து ) அனுப்பியிருகிறார்கள். 

மேலும் ஃப்ளோர் சூப்பர்வைசர்கள் (FS) என்ற பெயரில் சில வெட்டி ஆபிசர்களை  கல்லூரியில் நியமித்து கொண்டு, மாணவர்களை கண்காணிப்பார்கள். அவர்கள் முக்கிய பணியே பிள்ளை பிடிப்பதும், ஐ.டி கார்டு புடுங்குவதும் தான். அதாவது மேற்கண்ட தப்புகளை பண்ணும் மாணவ/மாணவியரை கையும் களவுமாக, ஆளும் ஐ.டியுமாக பிடித்து மேனேஜ்மென்ட்டில் கொடுப்பது  தான். 

இன்னும் இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல, பசங்க பொண்ணுங்க கூடவும், பொண்ணுங்க பசங்க கூடவும் பேசவே கூடாது. அது மகா மகா தெய்வ குத்தம். மீறினால் ஐ.டி கார்டு அவுட். தர்ம அடிதான். லன்ச்சில் மற்றவரிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டாலோ,  சத்தமாக பேசி சிரித்து கொண்டிருந்தாலோ  ஐ.டி கார்டு பறிக்கப்படும். அவ்வபோது வகுப்புகளில் ரைட் (RAID ) நடக்கும். பேக்குகளை சோதனை செய்வார்கள். அதில் ஏதாவது (செல்போன், சி.டி.. ) சிக்கினால் ஐ.டி கார்டு பிடுங்கப்பட்டு ஆயிரக்கணக்கில் அபராதம். 

பஸ்ஸில் ஆண்களும், பெண்களும் தனித்தனியே தான் அமர வேண்டும். அங்கேயும் FS-க்கள் இருப்பார்கள். கான்டீனிலும் அதே கதை தான். கல்லூரியில் மதிய சாப்பாடு ரொம்ப சுமாராக தான் இருக்கும். அதைதான் முதலாம் ஆண்டு மாணவ மணிகள் பணம் கட்டி சாப்பிட்டு தொலைக்க வேண்டும். ஹாஸ்டல் பசங்க தான் ரொம்ப பாவம். நாலு வருடமும் அங்கே தான் சாப்பாடு.  சில வேளைகளில் கரப்பான் பூச்சிகள், பல்லி விழுந்ததையும் போட்டிருக்கிறார்கள். "இவ்வளவு பெரிய அண்டாவுல நாலு இன்ச் பல்லி விழுந்தா யாரும் செத்துட மாட்டங்க.." அந்நியன் பட வசனம் இது.  படம் வருவதற்கு முன்பே எங்க காலேஜுல இதை பாலு சொல்லிடாரு...

ஆங்!!! பாலு யாருன்னு உங்களுக்கு சொல்லவே இல்லைல.. அவரு தாங்க எங்க காலேஜ் ஆல் இன் ஆல். இவரை பார்க்க கிட்டத்தட்ட 'நான் கடவுள்' ராஜேந்திரன் போல இருப்பார். கருத்த கட்டுடல், நெற்றியில் லேசான செந்தூரம், மொட்டை தலையில் தொப்பி, கொஞ்சம் மிடுக்கான ஆள்தான். பிரின்சிபாலை கண்டு கூட பலர் பயபடமாட்டங்க. ஆனா இவர் பேர சொன்னா, ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ட் முதல்  ஃபைனல் இயர் ஸ்டுடன்ட் வரை எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். எல்லா FSக்கும், எல்லா டிபார்ட்மெண்ட் HOD க்கும் இவர் தான் DON. காலேஜ்/ மேனேஜ்மென்ட் /ஹாஸ்டல் அட்மின். சுருக்கமாக மேனேஜ்மென்ட்டின் அடியாள்.


ஐ.டி கார்டு பறிகொடுப்பவர்கள் எல்லாருமே இவரிடம் தான் விசாரணைக்கு வருவார்கள். முடி கொஞ்சம் அதிகமாக வளர்த்திருந்தால், தலை மயிரை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி நாளை முடி வெட்டவில்லை என்றால், நானே கன்னா பின்னான்னு வெட்டி விடுவேன் என்று எச்சரிக்கை செய்வார். பல ஆபாச வார்த்தைகளை மாணவரிடம் உபயோகபடுத்துவார். பலருக்கு ஆபிஸ் ரூம் ட்ரீட்மென்ட்களும் நடந்தள்ளது.

இவ்வளவு கட்டுப்பாடு இருந்த போதும், சில காதல் புறாக்களும், சில பல டேட்டிங் சமாச்சாரங்களும் கல்லூரிக்குள் இருக்கத்தான் செய்தன. சட்டங்கள் ஒரு புறம் இருந்தாலும், அவ்வப்போது வெளியே தெரியாமல் இருபாலரும் பேசி கொண்டு தான் இருகிறார்கள்.  கண்ணால் பேசிக்கொண்டும், வகுப்பில் பிட்டு பேப்பரில் தகவல் பரிமாறிகொண்டும் இருந்தனர்; இருகின்றார்கள். மாட்டிகிட்டா மவனே(ளே) காலி தான்.. இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு வேண்டிகிடக்கு! 

இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.. தமிழ்நாட்டில் இந்த ஒரு கல்லூரி மட்டுமல்ல. இன்னும் பல கல்லூரிகள் (பத்தில் ஐந்து) இப்படி தான் சத்தமில்லாமல் இயங்கி கொண்டு இருக்கிறது. எல்லா கல்லூரிகளிலும் இது போன்ற பட்டாசு பாலுக்களும், செயின் ஜெயபால்களும், பிச்சுவா பீட்டரும் இருக்க தான் செய்கின்றனர். 

இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள்? என்று யோசித்து பார்த்தால், நமக்கு இவர்கள் செய்வது சரி என்று ஒரு விதத்தில் படும். (சேம் சைடு கோல் அல்ல..முழுசா படிங்க..) ஏன்னா நம்ம பசங்கள கொஞ்சம் ஃபிரியா விட்டா, அப்புறம் கையில பிடிக்க முடியாது. அதான் இந்த கெடுபிடி. இப்படி காலம்காலமாக ஆண்-பெண் பேசாமை என சட்டம் போட்டு அடிமை படுத்துகிறார்களே, ஏன் எந்த பெற்றோரும் கேள்வி கேட்பதில்லை என யோசித்தால் புரியும். காரணம் என்ன.? கல்லூரிகளில் இத்தகைய 'பலத்த சட்டங்கள் ' மூலம் பெற்றோர்கள் புன்முறுவல் பூக்கின்றனர் என்பதாலும், அவர்தம் பிள்ளைகள் தவறான வழிக்கு போகமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும், இந்த விதிகள் யாவும் இன்னும் நடைமுறையிலேயே இருக்கிறது. 

இவையாவும் மாணவ சமுதாயத்தின் உரிமை பறிக்கும் செயல் மட்டுமல்ல. அவர்களின்  சமூக திறன்களை குறைத்து கொண்டு வருகின்றது என்பதே உண்மை. இன்றைய கார்ப்பரேட் உலகத்தில், அலுவலகங்களில் உடன் வேலை செய்யும் எதிர் பாலினத்தவரோடு பேசி, பழகி வேலை செய்யும் நிலையில் தானுள்ளது. இதில் சில ஆண்கள் / பெண்கள்  எதிர் பாலினத்தவரோடு சகஜமாக பேச முடிவதில்லை. இந்த பிரச்சனை எல்லாருக்கும் ஏற்படுவது இல்லை. ஆனால் பலர், கல்லூரிகளில் போடப்பட்டுள்ள இத்தகைய விதியினால் அலுவலகங்களில் பாதிக்கபடுகின்றனர். உளவியலாளர்கள் இது தொழில்முறை மற்றும் சமூக திறன்ககளை பாதிக்கிறது என கூறுகின்றனர். மனிதவள மேலாளர்களும், பொறியியல் கல்லூரியில் நன்றாக படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து, அலுவலகங்களில் சேரும் போது, மற்றவரிடம் பேச/பழக கூச்சபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது. இதை பற்றி ஏற்கனவே என் பதிவில்  எழுதியிருக்கிறேன்.

கல்லூரியில் ஒழுக்கத்தையும் நல்ல பழக்க வழக்கங்களையும் கற்று கொள்ள வேண்டியது தான். கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டியதுதான். ஆனால் இத்தகைய சர்வாதிகார கண்டிப்புக்கள், அராஜகங்கள் தேவையில்லாதது. இது போன்ற கட்டாய சட்டத்தினால் ஒழுக்கத்தை கொண்டு வர முடியாது. வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும். இதை எப்போது எல்லா கல்லூரிகளும், பெற்றோர்களும் புரிந்து கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. அதுவரை லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலும், எத்தனை முறை ஸ்ட்ரைக் பண்ணாலும் ஒன்றுமே நடக்காது, எதுவும் மாறாது.

இதை பதிவு செய்வதன் மூலம் எங்கள் கல்லூரிக்கு வந்து உங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என்றோ, இது ஒரு மட்டமான கல்லூரி என்றோ சொல்லவில்லை. நல்ல கல்லூரி தான். நன்றாக படித்தால் நல்ல படிப்பும் வேலையும் கிடைக்கும் தான்.  நாங்க படிச்ச காலேஜ எங்களுக்கு பிடிக்கலன்னு சொல்லல. ரொம்ப பிடிக்கும், ஆனா உங்க காலேஜ் ருல்லஸ் தான் பிடிக்கல. நாங்கள் பட்ட சில பல கஷ்டங்களை  உங்கள் பிள்ளைகளோ, இனி வரும் மாணாக்கரோ பட கூடாது என்பது தான் எங்களது (Aluminis) நோக்கம். யாரவது ஒருவர் இந்த சட்டங்களை தகர்க்க வழி செய்வார் என நம்புகிறோம். வளரும் இளைய சமுதாயத்தை சுதந்திரமாக வாழ விடுங்கள்!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்