புதன், 19 பிப்ரவரி, 2014

என் தேசம்! என் மக்கள்! நான் !

வணக்கம்,

என் தேசத்தில் படித்தால் வேலை கிடைக்காது - ஆனால்
நடித்தால் நாடே கிடைக்கும்.

என் தேசத்தில் வீட்டில் கொள்ளையடித்தால் ஆயுள் தண்டனை கொடுப்பார்கள் - ஆனால் லட்சம் கோடி ஊழல் செய்தவனை மூன்று ஆண்டுகளில் விடுவித்து விடுவார்கள்.

என் தேசத்தில் கொலை பாதகம் செய்தால் ஆயுள் தண்டனை கொடுப்பார்கள் - ஆனால் பிரதமரை கொல்ல உதவினால் 20 வருடங்களில் விடுதலை செய்யபடுவார்கள்.



என் தேசத்தில் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று ஓட்டு போட தயங்குவார்கள்- ஆனால் ஐந்து மணி நேரம் வரிசையில் நின்று இலவச தொலைக்காட்சி, விலையில்லா கிரைண்டர், மிக்சி வாங்குவார்கள்.

என் தேசத்தில் தேர்தலில் யாரை தேர்ந்த்தெடுக்க வேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள்- ஆனால் சூப்பர் சிங்கரில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று யோசிப்பார்கள்.

என் தேசத்தில் ஒவ்வொரு வனத்தையும் செல்வமாக பார்ப்பார்கள்-ஆனால் அந்த வனங்களை அழித்து கட்டிடம் கட்டுவார்கள்.

என் தேசத்தில் விவசாயத்தை நாட்டின் முதுகெலும்பு என சொல்வார்கள் - ஆனால் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்றுவிடும்படி செய்வார்கள்.

என் தேசத்தில் இன ஓற்றுமை பற்றி பெருமையாக பேசுவார்கள்-ஆனால் ஒரே மொழி பேசும் மக்களின் தேசத்தை இரண்டாக பிரிப்பார்கள்.

என் தேசத்தில் மத ஒற்றுமை பற்றி மேடையில் பேசுவார்கள் -ஆனால்
அடுத்த மதத்து கோவிலை இடிப்பார்கள்.

என் தேசத்தில் அரசியல் சரியில்லை, அரசியல்வாதிகள் சரியில்லை என குறை கூறுவார்கள்- ஆனால் காசு வாங்கி ஓட்டை விற்று, கர்மவீரர் போன்றோரை தோற்க்கடிப்பார்கள்.

என் தேசத்தில் கருத்து சுதந்திரம் பற்றி வாய்கிழிய பேசுவார்கள் - ஆனால்
ஃபேஸ்புக்கில் லைக் போட்டால் உள்ளே தள்ளி விடுவார்கள்.

என் தேசத்தில் ஜனநாயகம் பற்றி பெருமைப்பட பேசுவார்கள் - ஆனால்
ஒரே குடும்பத்தினரிடம் தலைமை ஆட்சியை ஒப்படைப்பார்கள்.

என் தேசத்தில் பெண்ணியம் பற்றி பக்கம் பக்கமாக பேசுவார்கள்- ஆனால்
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு எனப் பேர் வாங்கி கொடுப்பார்கள்.

என் தேசத்தில் சாதி மத பேதம் இல்லாமல் ஒன்றுபடுவோம் என சொல்வார்கள்- ஆனால் படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் முதலில்
சாதிக்கு தான் முன்னுரிமை தருவார்கள்.

என் தேசத்தில் காவல் துறை லஞ்சம் வாங்குகிறார்கள் என குறை சொல்வார்கள்- ஆனால் முந்நூறு ரூபாய் ஃபைன் கட்ட வேண்டிய இடத்தில், போக்கு காட்டி நூறு ரூபாய் அன்பளிப்பு கொடுத்து தப்பிப்பார்கள்.

என் தேசத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என குறை சொல்வார்கள்- ஆனால் பத்தாவது படிக்கும் பெண்ணுக்கு காசு கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் எடுத்து கொடுப்பார்கள்.

என் தேசத்தில் சினிமாவில் அரைத்ததையே அரைக்கிறார்கள் என விமர்சிப்பார்கள்- ஆனால் நல்ல படங்களை வீட்டில் டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்.
 
என் தேசத்தில் முன்னால் ஜனாதிபதியை அவமதித்தால் விட்டு விடுவார்கள்-ஆனால் சினிமாவில் ஒரு மத தீவிரவாதியை  காட்டினால் படத்தை தடை செய்ய கோருவார்கள்.

என் தேசத்தில் சமூக கருத்துகளையும், தேச பற்றினையும், நல ஒழுக்கதினையும் பற்றி நிறைய பதிவு செய்வார்கள் -ஆனால் அதை அவர்கள் மனதில் பதிய வைக்காமல், சமூக வலைதளங்களிலும், இணைய தளத்திலும் மட்டும் பதிந்து விடுவார்கள்... நம்மை போல!!!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

3 Comments:

Avargal Unmaigal சொன்னது…

மிக மிக அருமை விமல்ராஜ்... சொல்லியவிதம் மிக அருமை.

VK சொன்னது…

superah irukku boss...

Umamaheswari சொன்னது…

Sooper Narration!!!